உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பேரணியில், ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, புகையிலைக்கு எதிரான பதாகைகளை ஏந்திச் சென்றனர்.