கோவை, நவ.14- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு மூதாட்டிகள் இருவர் தீக் குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலை யில், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இரண்டு பெண்கள் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களது கையிலிருந்த எரிபொருள் கேனை பறித்தனர். இதையடுத்து அந்த மூதாட்டிகளிடம் நடைபெற்ற விசார ணையில், தற்கொலைக்கு முயன்றது மேட்டுப்பாளையம், உக்கான் நகரை சேர்ந்த அமுதா (50) மற்றும் நாகமணி (46) என்பது தெரிய வந்தது. அப்போது போலீசாரிடம் அமுதா கூறியதாவது, நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனது மகளின் பிரசவத்திற்காக சென்றேன். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது எனது 1.5 சென்ட் வீட்டை ஒரு நபர் ஆக்கிரமித்து குடி புகுந்தார். நான் சென்று கேட்ட போது, அவர்கள் வீட்டை காலி செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கின்ற னர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த நபரிடமிருந்து எனது வீட்டை மீட்டு தர வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து நாகமணி போலீ சாரிடம் கூறுகையில், நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக நான் எனது தம்பி வீட்டிற்கு சென்று ஒரு மாதம் தங்கி விட்டேன். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது எனது வீட்டின் பூட்டை உடைத்து வேறு ஒரு நபர் குடியேறி இருந்தார் இது தொடர்பாக வட்டாட்சியர், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத் தில் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.