சேலம், ஜன.28- சங்ககிரி அருகே விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பேரூ ராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு, கால்நடைகளை முன்னிநிறுத்தி குப்பை கொட்ட வாகனங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சேக ரமாகும் குப்பைகளை, குறுக்குப் பாறை யனூரில் கொட்டிட பேரூராட்சி நிர்வா கம் முடிவெடுத்தது. இம்முடிவு விவ சாயத்தை முழுமையாக பாதிக்கும் என்று, அதை எதிர்த்து பாதிக்கப்படும் விவசாயி ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். அப்போது உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, 12 வாரங் களுக்குள் பாதிக்கப்படும் விவசாயின் கோரிக்கைக்கு வாய்ப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க உத்தரவிட் டது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சி யர் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மேலும், விவ சாயிகள் எதிர்க்கும் இடத்திலேயே குப் பைகளை கொட்ட ஆட்சியர் உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து குப்பை களை கொட்டும் பணி துவங்கப்பட்டது. மேற்படி இடத்தில் குப்பைகளை கொட்டினால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். விவசாயம் பாதிக்காத வகை யில் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று அரசு நிலங்கள் இருக்கிறபோது, அங்கே கொட்டாமல் ஒருதலைபட்ச மாக பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் செயல்படுகின்றனர். இத னைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், ஆதித்தமிழர் கட்சி சார்பில் பாதிக்கப்படும் விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்கள் சங்ககிரி கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், பேரூராட்சி நிர்வாகம் காவல் துறை உதவியுடன் மீண்டும் குப்பைக் கொட்ட வந்த பேரூராட்சி வாகனங்களை விவசாயிகள், தங்க ளது கால்நடைகளை முன்னிறுத்தி சிறைப்பிடித்தனர். தொடர்ந்து செவ்வா யன்று 4 ஆவது நாளாக குப்பையைக் கொண்ட வந்த வாகணங்களை 4 நாட்களிலும் திருப்பி அனுப்பப்பட்டது. காலை முதல் மாலை 6 மணி வரை சிறைப்பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டு வருகிறது. எத்தனை நாள் வந்தா லும் இதைத்தான் செய்வோம் என போராட்டக்காரர்களான விவசாயிக ளும், விவசாயத் தொழிலாளர்களும் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, வட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.