தருமபுரி, டிச.4- காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு, கேஆர்பி அணை யில் இருந்து செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டுமென விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் பகுதியில் சில வருடங் களாக போதிய மழை பெய்ய வில்லை. இதனால் ஏரி, குளம் மற்றும் குட்டைகள் என அனைத்தும் வறண்டே காணப்படுகிறது. நடப் பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்த போதும், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரி களுக்கு போதுமான தண்ணீர் வர வில்லை. காரிமங்கலம் பகுதியில் ஒரே நீர் ஆதாரம் கேஆர்பி அணை தண்ணீர் மட்டுமே. இந்த அணை கடந்த 2014-15ம் ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதங் களில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் பருவ மழையும் நன்றாக பெய்ததால் காரிமங்கலம் வட்டம் ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. அதன்பின் தண்ணீர் வந்தாலும் ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரம்பியது. அணையில் நீர் இருப்பு குறைவால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பது இல்லை. கேஆர்பி அணையி லிருந்து வலதுபுற கால்வாயில் பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, காரிமங்கலம் மணிக்கட்டியூர் மத கிற்கு வருகிறது. இங்கிருந்து ஒரு மதகில் திண்டல் ஏரி பக்கமும், மற் றொரு மதகில் இருந்து காரி மங்கலம் பெரியேரி பக்கம் உள்ள ஏரி களுக்கும், தண்ணீர் பிரிந்து செல் கிறது.
பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள திண்டல் ஏரி தண்ணீர் நிரம்பி, அதன் பின் ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள பந்தாரஅள்ளி, கீழ்சவுளு பட்டி, மண்ணாடிபட்டி, நடுக் குட்டை, நடுக்கொட்டாய் ஏரி, முள்ளனூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மணிக்கட்டியூர் மதகிலிருந்து சிறிது தூரத்திலே எச்சனம்பட்டி ஏரி உள்ளது. ஆனால் இதுநாள் வரை எச்சனம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வர வில்லை. இந்தாண்டு ஏரிக்கு வரும் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது திண்டல் ஏரி பக்கமும், காரிமங்கலம் பெரியேரி நிரம்பி குட்டூர் ஏரி மற்றும் சந்தைபேட்டை ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் காரி மங்கலம் வட்டத்தில் உள்ள பல ஏரி களில் குடிமராமத்துப்பணி மேற் கொள்ளப்பட்டு ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் முழு கொள்ளளவு தண்ணீரை ஏரி களில் தேக்கி வைக்க ஏதுவாக உள்ளது. இருப்பினும் குட்டூர் ஏரியில் இருந்து வண்ணான் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய், வண்ணான் ஏரியில் இருந்து பெரிய மிட்டஅள்ளி ஏரிக்கு செல்லும் கால் வாய், காரிமங்கலம் மேம்பாலம் அருகே தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு முட்புதர் மண்டி உள்ளது. பெரியமிட்டஅள்ளி ஏரி நிரம்பி உச்சம்பட்டி, தெல்லம்பட்டி கரகப் பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். அதேபோல் வண்ணான் ஏரியில் இருந்து சின்னமிட்டஅள்ளி ஏரி, சிக்கதிம்மனஅள்ளி ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். தற் போது கால்வாயில் தண்ணீர் வரு கிறது. ஆனால் கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுவதால், கடை மடை ஏரிகள் வரை தண்ணீர் சென்ற டையுமா என்ற கேள்விக்குறியாக உள்ளது. பல்வேறு இடங்களிலும் கால்வாயில் புதர்மண்டியுள்ளதால் நீரின் வேகம் தடைபட்டு, தண்ணீர் செல்ல தாமதமாகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் கேஆர்பி அணை யில் இருந்து செல்லும் கால்வாய்கள் அனைத்தையும், போர்க்கால அடிப் படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.