districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு, மே 17- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து  பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி செவ்வாயன்று தமிழ்நாடு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 20000  விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 விழுக் காடு உயர்த்தி ஓய்வூதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட படி  வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழிய ருக்கு வழங்கியது போல, மாநில அரசு  ஊழியர்களுக்கும் 3 விழுக்காடு அகவி லைப்படியை ஜனவரி மாதம் முதல் வழங்க  வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன் வகித்தார். செயலாளர் பன்னீர் செல்வம், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மாணிக்கம், சின்னசாமி, செல்லமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஹரிதாஸ்  நன்றி கூறினார். இந்த தர்ணா போராட்டத் தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை டாடாபாத், பவர் ஹவுஸ் அரு கில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.அரங்கநாதன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர்  எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றி னார். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலா ளர் எஸ்.மதன், மின் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் சி.வி. மீனாட்சிசுந்த ரம், தபால் R.MS ஓய்வூதியர் சங்கத் தலை வர் எஸ்.கருணாநிதி, மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொருளாளர் ஏ.குடி யரசு, ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்  சங்க தலைவர் ஏ.மாணிக்கம், ஓய்வுபெற்ற  போக்குவரத்துக் கழக செயலாளர் பி.சுரேந் திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இப் போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஓய் வூதியர்கள் பங்கேற்றனர். முடிவில் ஓய்வூதி யர் சங்க மாவட்ட பொருளாளர் பி.நடராஜன்  நன்றி கூறினார். 

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சீவி ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செய லாளர் நாகராஜன், பொருளாளர் பெரி யய்யா, துணை தலைவர் குமார் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி‌

தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி தலை மையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தர் ணாவை துவக்கிவைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எம்.பெருமாள்‌, மாவட்ட துணைத்தலைவர் பி.மோகன்ராஜ்,  கே.துரை, மாவட்ட இணை செயலாளர் எம். கோபால், பி.கருணாகரன் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கிபேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் நிறைவுறையாற்றினார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்கு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் தலைமை வகித்தார். இதில் அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில உதவிப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜ் துவக்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மு. பாலச்சந்திரமூர்த்தி உரையாற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் மா.நாட்ராயன், ஏஐபி ஆர்பிஏ கோட்டச் செயலாளர் என்.கருப்புச் சாமி, ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் வி.பி.பாலகிருஷ்ணன், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் கோட்டச் செயலாளர் பி.ஈ.அச்சுதன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது இந்த  போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.