சேலம், ஜூன் 21- நூறு நாள் வேலைத்திட்டத்தை முறை யாக அரசு செயல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்து வரு கின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து, தொழிலாளர்களின் வேலை நிலை ஆகியவைகள் குறித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறையாக செயல்படுத்த ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப் புற பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வேலை களை வழங்க அதிகாரிகள் முன் வர வேண் டும். அதிகாலைப் பொழுதில் வருகை பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பதை நடைமுறைப் படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இதில், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ். கே.சேகர், மாவட்ட நிர்வாகி எம். சின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, விவசாய தொழிலாளர் சங் கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத் தும் நியாயமான கோரிக்கை என்றும், திர ளாக போராட்டத்தில் கலந்து கொள்வோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.