districts

img

அரசு உத்தரவுகளையும், சட்ட விதிகளையும் அமல்படுத்திடுக

ஈரோடு, ஏப்.13- ஈரோடு மாவட்டத்தில் நீண்ட காலமாக  அமல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட் டுள்ள அரசு உத்தரவுகளையும், சட்ட விதி களையும் அமல்படுத்தக்கோரி மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி, அடையாள சான்று, ரயில் பயண சலுகை, பேருந்து உதவியா ளர் பயண சலுகை சான்று வழங்க வேண் டும். இணைப்பு சக்கர மோட்டார் வாகனம் கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு முழுமையான வேலை, ஊதி யம் வழங்க வேண்டும். தனியார் துறை பணி களில் சட்டப்படி 5 சதவிகித இட ஒதுக்கீடு அர சாணையை கறாராக அமல்படுத்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தி னர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்ட தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செய லாளர் ஏ.சகாதேவன், நிர்வாகிகள் மாரி முத்து, வி.ராஜு, செந்தில்குமார், கே.அன்ன கொடி, குழந்தைசாமி, ரமேஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இப்போராட்டத்தால் காவல் துறையின ருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண ணுண்னி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக் கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு மாற்றுத்திறனாளி கள் அனைவரும் கலைந்து சென்றனர்.