districts

img

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கேம்பஸ் இண்டர்வியூ 23 மாணவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை

திருப்பூர், ஜூலை 27- திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் கேம்பஸ் இண்டர்வியூ செவ் வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில்பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு  அலுவலர் ஜெகதீஸ் பாபு முன்னிலை  வகித்தார். முன்னதாக கேம்பஸ் இண் டர்வியூ தொடர்பான அறிமுக கூட்டம்  பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற் றது. இதில் திருப்பூர் கட்டிட பொறியா ளர்கள் சங்க தலைவர் ஸ்டாலின் பாரதி  கேம்பஸ் இண்டர்வியூ குறித்து விளக்கி  பேசினார். செயலாளர் ராதாகிருஷ் ணன், முன்னாள் தலைவர் முரளி ஆகி யோர் வாழ்த்தி பேசினார்கள். இதைய டுத்து கட்டிட பொறியாளர்கள் சங்க  நிர்வாகிகள் மாணவர்களிடம் தனித்த னியாக நேர்காணல் நடத்தினார்கள். இதன் முடிவில் கட்டிட பட வரைவாளர்  பணிக்கு 20 மாணவர்கள், எலக்ட்ரீசியன்  பணிக்கு 3 மாணவர்கள் என மொத்தம்  23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். உட னடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப் பட்ட கட்டிட பட வரைவாளர் படிப்பில் சேர்ந்து  அரசு உதவியுடன் படிக்கும்  பொருளாள தாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்கு விக்கும் நோக்கில் இந்த கேம் பஸ் இண்டர்வியூ திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங் கத்தின் சார்பில் முதல்முறை யாக அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக நடத்தப்படுகிறது என்றும், அடுத்தடுத்து  மற்ற அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்கள் மற்றும் தனியார் இன்ஜினீயரிங்  கல்லூரிகளில் இதுபோன்ற கேம்பஸ்  இண்டர்வியூ நடத்தப்பட்டு, மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சங்க தலைவர் ஸ்டாலின் பாரதி  தெரிவித்தார்.