districts

img

சட்டவிரோதமாக கருக்கலைப்பு - 8 பேர் கைது

தருமபுரி, ஜூன் 1- தருமபுரியில் சட்டவிரோத மாக பாலினம் கண்டறிந்து கருக் கலைப்பில் ஈடுபட்ட செவிலியர், புரோக்கர் உட்பட 8 பேரை தரும புரி நகர போலீசார் கைது செய் துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான ராகவன்  மனைவி  வனஜா இந்த தம்பதி்களுக்கு ஏற் கனவே இரண்டு பெண் குழந்தை கள் உள்ள நிலையில் மூன்றாவ தாக கர்ப்பமுற்றிருந்தார். இந்நி லையில், வனஜாவிற்கு கடந்த 13  ஆம் தேதி கருவினை கண்டறிந்து பெண் சிசு என தெரியவந்ததும் கருக்கலைப்பு  செய்துள்ளனர். அப்போது சிசுவின் தலை துண் டாகி பாதி உடல் வயிற்றிற்குள் சிக்கி கொள்ளவே உடல் நலம்  பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரவே போலீஸ் விசாரணையை தொடங்கியது.  போலீசார் விசாரித் ததில் ஒரு கும்பல் கருகலைப்பில்  ஈடுபட்டது தெரியவந்தது. திருப்பத் துரை சேர்ந்த ஜோதி, சதீஷ், சுதா கர் ஆகிய மூவரும் முக்கிய நபர் கள் ஆவர். மேலும், தருமபுரி யைச் சேரந்த செவிலியர் கற்பகம், இவருக்கு உதவியாக இருந்து வந்த இவரது கணவர் விஜயக் குமார் மற்றும் புரோக்கர்கள் சரிதா, குமார், வீட்டு உரிமையா ளர் வெங்கடேசன் ஆகிய 8 பேரை தருமபுரி நகர போலீசார் கைது  செய்துள்ளனர். மேலும், அவர் கள் பயன்படுத்தி வந்த  ஸ்கேன் இயந்திரம், கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர். பாலினம் கண்டறிய 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெண் சிசு என தெரிய வந்தால் கருக்கலைப்பு  செய்திட 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயும் வசூல் செய்தது  தெரியவந்தது. கடந்த இரண்டரை  வருடங்களில் சுமார் ஆயிரம் கருக் கலைப்பு நடந்திருக்கலாம் என  கூறப்படுகிறது. தருமபுரி, காரிமங் கலம், பெரியாம்பட்டி, நல்லம் பள்ளி ஆகிய இடங்களில் வீடு மற் றும் அறை எடுத்து மகளிர் சங்கம்  நடத்துவதாக கூறி, இந்த சட்ட  விரோத செயலை செய்திருக்கின் றனர். தருமபுரி போன்ற மாவட்டங் களில் ஒரு காலகட்டத்தில் பெண்  சிசுக்கொலைகள் அதிகம் நடந்த  நிலையில் அரசு இதனை தடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக் கிய நிலையில், தற்போது இது  போன்ற  பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி றது.