தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஈரோடு, காமராஜபுரம் மனாருல்ஹுதா மஸ்ஜித் மதஸாவில், மதநல்லிணக்க இப்தார் விருந்து நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸா ரத்தலி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், அமைப்பின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, பொரு ளாளர் கு.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.