districts

img

“உழைத்து கொண்டிருந்தால் வெற்றி தேடி வரும்’

கோவை,பிப். 29- இலக்கை அடைய தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தால் வெற்றி தேடி வரும் என கோவை யில் நடைபெற்ற நிகழ்வில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்க ளிடையே அறிவுறுத்தினார். கொடிசியா அரங்கில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிராம  ஊராட்சிகளுக்கு கலைஞர் விளை யாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை கொடிசியா அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளை யாட்டு உபகரணங்கள் வழங்கும்  விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல்  தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், “கலைஞர் விளையாட்டு உப கரணங்கள் 228 ஊராட்சி மன்றங் களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள  12600 ஊராட்சிகளுக்கு 33 வகை யான உபகரணங்கள் 86 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு  உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் சிறப்பாக பயிற்சி செய்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும். இந் திய ஒன்றியம் திரும்பி பார்க்கும் வகையில் விளையாட்டு துறை சார்ந்து முன்னெடுப்புகள் எடுக் கப்பட்டு வருகிறது. கேலோ இந் தியா விளையாட்டு போட்டிகளில் 98  பதக்கங்களை தமிழ்நாடு பெற்று இரண்டாம் இடம் வந்தது. அடுத்த  முறை முதலிடத்தை பிடிக்கும் என்ற  நம்பிக்கை உள்ளது. மேலும் பட் ஜெட்டில் பள்ளிக் கல்வி துறைக்கு  ரூ 44 ஆயிரம் கோடியும், விளை யாட்டு துறைக்கு ரூ.440 கோடியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.  (அவர் மகனின் துறைக்கு தந்தை குறைவாக தான் நிதி ஒதுக் கியுள்ளார்.

தந்தை தரவில்லை. நண்பர் நீங்கள் தரலாம் என  பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷை பார்த்துக் கேட்டார்) மேலும், விளையாட்டு போட்டி களில் பதக்கங்களை பெறும் வீரர் களுக்கு 6 கோடி ரூபாய் நிதி உதவி  வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாண வர்கள் விளையாட்டு உபகரணங் களை பயன்படுத்தி ஆரோக்கியம மாக இருக்க வேண்டும். கலைஞ ருக்கு அரசியல்வாதி, இலக்கிய வாதி, பேச்சாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் கலைஞர் சிறு வயதிலேயே களத்தில் இறங்கி விளையாடியவர். பின்பு அரசியல் களத்திலும் விளையாடினார். அரசியல், சினிமா, இலக்கியத்தில் ஒரே நேரத்தில் கொடி கட்டி பறந்தவர். கலைஞரின் உழைப்பு விளையாட்டு வீரர்களுக்கு வர  வேண்டும். உழைத்து கொண்டி ருந்தால் வெற்றி தேடி வரும். விடுதியில் இருக்கும் மாணவர் களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டியது நமது பொறுப்பு. விளையாட்டு மட்டு மின்றி நீங்கள் தேர்ந்தெடுத்த துறை யில் வெற்றி பெற உழைக்க வேண் டும்” எனத் தெரிவித்தார்.  இதையடுத்து தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி யது குறித்த கேள்விக்கு, “அப்படி சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள்” என பதிலடி கொடுத்தார்.