போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் சேலம், ஜூன் 18- வசூல் குறைவாக இருந் தால் பணியிடை நீக்கம் செய் யும் அரசு விரைவு போக்குவரத்து நிர்வா கத்தை கண்டித்து, சிஐடியு விரைவு போக்குவ ரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அரசு விரைவு போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எண் ணற்ற சிரமங்களை போக்குவரத்து நிர்வாகம் கொடுத்து வருகிறது. தொழில் நுட்ப பிரிவில் ஆட்கள் இல்லை. உதிரி பாகங்கள் இல்லை. எதற்கெடுத்தாலும் பணியிடை நீக்கம் செய்து வருகின்றனர். வண்டி ஓடினாலும், ஓடாவிட் டாலும் டயர் ரொட்டேஷன் செய்ய நிர்பந்திக் கப்படுகிறது. கிலோமீட்டருக்கு அதிக தூரம் ஓட்ட வேண்டும் என கேட்டு பணி வழங்க மறுப்பது, காத்திருக்க வைப்பது, படிகளை தன்னிச்சையாய் குறைக்கும் நிலையை போக் குவரத்து நிர்வாகம் கையிலெடுத்துள்ளது. தினக்கூலி தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலியான ரூ.835 கூட தராமல் ஏமாற்றும் அவ லம் போக்குவரத்து துறையில் நடைபெற்று வருகிறதென குற்றஞ்சாட்டி, சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் செய லாளர் லியாகத் அலி தலைமை வகித்தார். சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், விரைவு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில துணைப் பொதுச்செய லாளர் முருகேசன், நிர்வாகி செல்லப்பன், மாநில துணைத்தலைவர் சந்திரன், செய லாளர் கலைச்செல்வன் மற்றும் மணிமுடி, சி.பி.வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.