கடந்த 9 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி தலை மையிலான ஒன்றிய ஆட்சியில், இந்திய நாடு சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட் கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு, மக்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகிறார்கள். மோசடிகளின் மொத்த உருவமாக உள்ள மோடி அரசை கண் டித்து செப்.7 ஆம் தேதியன்று (நாளை) நாடு தழுவிய மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. இதனிடயே மோடி அரசின் செயல் பாடுகள் குறித்து உழைக்கும் வர்க்கத்தினர் கூறிய தாவது,
கௌஸ், ஆட்டோ தொழிலாளர்
ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் குளறுபடியால், எப்சி கட்டணம் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விலையை 200 ரூபாய் மட்டும் குறைத்து, எவ்வித அறிவிப்புமின்றி ஆட்டோ கேஸ் விலை சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை என அப ராதம் விதித்த கொடுமை நடக்கிறது. ஒன்றிய அரசின் தொடர் அடாவடிப்போக்கால் சாலைபோக்குவரத்து தொழில் முற்றிலுமாக முடங்கிப்போகும் நிலை உள் ளது.
கோகுல், நிதி நிறுவன ஊழியர்
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாக சொன்ன மோடி, வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. என்னோடு படித்த இளை ஞர்கள் பலரும் உரிய வேலை இல்லாததால் சொமாட்டோ (zomato), சுவ்கி (swiggy) போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களிலும், பிளிப்கார்ட், அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகளில், டெலி வரி மேன்களாக, ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய அரசு தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ளாத வரை எதுவும் மாறப் போவதில்லை. இல்லையேல் ஒன்றிய மோடி அர சையே மாற்ற வேண்டியதுதான்.
நல்லசாமி, சிறு தொழில் உரிமையாளர்
முன்பெல்லாம் தொழில் கடன் கேட்டு வங்கிகளை அணுகினால், எளிய முறையில் விதிமுறைகள் இருக் கும். எளிமையாக கடன் பெற முடிந்தது. தற்போது ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பால், சொல்ல முடியாத துயரத் திற்கு ஆளாகி வருகிறோம். வங்கியில் கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பிரச்சனை எழு கிறது. சமீப காலமாகவே சிறு, குறு தொழில்களுக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சிறு, குறு உற்பத்தி பொருட்களுக்கான உதிரிபாகங்கள் தற் போது 45 முதல் 50 ரூபாய் வரை விலையேற்றம் கண் டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் செயல்படா ததன் விளைவால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
உமாசங்கர், சமூக ஆர்வலர்
மோடி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி அனைத்தும் உயர்ந்துவிட்டது. குறிப்பாக, சாதாரண உழைக்கும் மக்கள் அன்றாடம் பருகக்கூடிய ஒரு தேநீரின் விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இப்படி நிலைமை இருக்க நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே இருந்தால், எப்படி இந்த ஏழை எளிய மக்கள் தாங்கிக் கொள்வார் கள். பள்ளிபாளையம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஏற்கனவே விசைத்தறி தொழில் சார்ந்த பாதிப்புகளால் பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு, மேலும் அடியை கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடு கள் உள்ளது.
தர்மராஜ், விசைத்தறி தொழிலாளி
விசைத்தறி தொழிலாளியான நான் ஆரம்பத்தில் நான் மட்டுமே வேலைக்கு சென்று வந்தேன். தற்போது மனைவியும் என்னோடு வேலைக்கு வருகிறார். ஆனா லும், போதிய வருமானம் இல்லாத நிலையே உள்ளது. அந்த அளவிற்கு கடந்த 9 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவில் உள்ளது. குடும் பத்தில் உள்ள இரண்டு நபர்களின் வருமானம் போதா தால், உள்ளூரில் செயல்படும் நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்று, மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளோம்.
ரவி
பஞ்சு நூல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதால், தமிழ்நாட்டில் செயல்படும் விசைத்தறி ஜவு ளிக்கு நூல் கிடைக்காத நிலை உள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கினால், விசைத்தறி தொழில் சார்ந்த நிறுவனங்கள் மீது அக்கறை காட்டாத தால், விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவ டைந்து வருகிறது. நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்புக்குரல் வலுவடைந்து வரும் நிலை யில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மோடி அரசின் அடா வடிப்போக்கிற்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக் கும்.
-பிரபாகரன்