districts

img

உரிமைகளைக் காக்க உரிமையோடு கேட்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு, ஏப். 16- உரிமைகளைக் காக்க உரிமை யோடு கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என  ஈரோடு தொகுதி திமுக வேட்பா ளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து கொடு முடி அருகே ஒத்தக்கடை பகுதி யில் விளையாட்டு அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளரு மான உதயநிதி பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தைப் பொறுத் தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும். ரூ. 60 கோடி ரூபாய் மதிப்பீட் டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம், ரூ. 20  கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறி கள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத் திட்டம் மூலம்

, 18 லட்சம் மாணவர் கள் பயன்பெற்று வருகிறார்கள். தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. 10 ஆண்டுகளாக தமிழ்நாட் டிற்கு வராத பிரதமர் மோடி இப்போது மக்களை ஏமாற்றி வாக்குவாங்கிவிடலாம் என்று தமிழ்நாட்டில் சுற்றி சுற்றி வரு கிறார். தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா  மட்டும் திரும்ப வருகிறது. தமிழகத் தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் ஒன் றிய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நம்  உரிமைகள் வேண்டும். பாஜகவின்  கை பாவையாக இங்கே இருக் கும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தேவையில்லை என்கிறார். எங்களது மொழி உரிமை. அதை விட்டு கொடுக்க முடியாது என் றார் நமது முதல்வர்.  இப்படி நமது மொழியுரிமை, கல்வி உரிமை, நிதி உரிமையை மறுக்கின்றனர். இவ்வளவு பெரிய  நிதிச் சுமையிலும், ஒன்றிய அரசு  கொடுக்கும் 29 பைசா வைத்துக்  கொண்டு இவ்வளவு நலத்திட்டங் களையும், உதவிகளையும் நமது  முதலமைச்சர் செய்கிறார். தமிழ் நாட்டு மக்களை மதிக்கக் கூடிய நிதி  உரிமை கொடுக்கக்கூடிய நல்ல பிர தமர் வந்தார் என்றால், இன்னும் போராடி வாதாடி அதிக நிதியை  பெற்று ஏராளமான நலத்திட்டங் களை நமது முதல்வர் செய்வார். எனவே இந்த மூன்றாண்டுக ளில் என்னென்ன திட்டங்கள் செய் திருக்கிறோம் என்பதை கவனத்தில்  கொண்டு அடுத்த இரண்டு நாட்க ளில் 29 பைசா பாஜக இந்தியாவை  எப்படி பின்னுக்கு தள்ளியது என்ற  பிரச்சாரத்தை செய்ய வேண்டும். ஆகவே உரிமையோடு கேட்கி றேன் உதயசூரியனுக்கு வாக்களிப் பீர் என்றார். 

கோபி

இதேபோன்று, ஈரோடு மாவட் டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கூட்டணி சார்பில் திருப் பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் கே.சுப்பரா யனை ஆதரித்து உதயநிதி ஸ்டா லின் பேசுகையில், 37ஆவது தொகு தியாக திருப்பூர் தொகுதிக்கு  வந்துள்ளேன் கோபிசெட்டிபாளை யத்தில் திரண்டிருக்கும் கூட் டத்தை பார்த்து ரொம்ப காலம் ஆகி விட்டது நிச்சயம் திருப்பூர் தொகு தியில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி இக்கூட்டம் வெற்றியை உறுதி செய்து விட்டு வந்து கூட்ட மாக தெரிகிறது. திருப்பூர் நாடா ளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் கே.சுப்பராயன் அண்ணனுக்கு கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்க ளித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். டி.என்.பாளையம் பகுதியில் வேதபாறை நீர்த்தேக்க திட்டம் கட்ட நடவடிக்கை எடுக் கப்படும், மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் கோபிசெட்டிபா ளையம் - ஈரோடு ஆகிய வழித்த டங்களை உள்ளடக்கிய ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை ஆதாரித்து, உடுமலை மத்திய  பேருந்து நிலையம் முன்பு திமுக  இளைஞரணி செயலாளர் உதய நிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர் மத்தி யில் பேசிய அவர், தமிழ்நாடு முழுவ தும் அனைத்து தொகுதிகளையும் இந்திய கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும். அதி முக ஆட்சிகாலத்தில் ஒன்றிய அர சிடம் அடகு வைத்த தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளும் மீட்க படும்.  திமுக ஆட்சியில் பிஏபி திட்டத் தில் ரூ.200 கோடி மதிப்பில் கால் வாய்கள் சரி செய்யப்பட்டு உள்ளது. மடத்துக்குளம் பகுதிக்கு ரூ.17 கோடி புதிய குடிநீர் திட்டம் நடைமுறை படுத்தபட்டுள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் உள்ள மதகுகளை மாற்றி உள்ளது. மேலும் இந்த பகுதி யில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கொப்பரை தேங் காய்க்கு கொள்முதல் விலையை உயர்த்தவும், இப்பகுதியில் இனாம் நிலங்களுக்கு 0 சதவீத வரியை ரத்து செய்து, நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோல், மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அமாரவதி சர்க்கரை ஆலை சிறப் பாக செயல்படவும், பிஏபி திட் டத்தின் பல ஆண்டு கோரிக்கை யான ஆணைமலை – நல்லாறு அணை கட்ட கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அணை கட்ட வும், அனைத்து ரேசன் கடைகளி லும் தேங்காய் எண்ணை விற் பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார்.  எனவே, மக்களின் நலனை மட்டும் மனதில் வைத்து செயல்ப டும் முதல்வரின் கரத்தை வழுப்ப டுத்த பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கே. ஈஸ்வரசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு களை செலுத்த வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.