உடுமலை, ஜன.3- நகராட்சி விரிவாக்கத்தில் ஊராட் சிகளை இணைக்கும்போது, அந்த பகுதியில் செயல்படுத்தப்படும் நூறுநாள் வேலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை நகராட்சியில் எல் லையை விரிவுபடுத்த நகராட்சி ஆணையர் ஊராட்சி நிர்வாங்க ளுக்கு கடந்த மாதம் கடிதம் அனுப் பியுள்ளார். இதன்படி, உடுமலை நகராட்சி தற்பொழுது 7.41 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நக ராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில், நகராட்சியின் எல்லைகளில் உள்ள கிராம ஊராட்சிகளான கணக் கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுச்சேரி, சின்னவீரம் பட்டி, கணபதிபாளையம், ராகல் பாவி, கண்ணமநாயக்கனூர் மற் றும் பூலங்கிணறு ஆகிய ஊராட்சி களை நகராட்சியுடன் இணைக்கும் தீர்மானம், ஊராட்சியின் மக்கள் தொகை மற்றும் கடந்த மூன்றாண்டு கள் தணிக்கை செய்யபட்ட வரவு செலவுகள் குறித்த அறிக்கையை தர கடிதம் தரப்பட்டது. இந்நிலையில், உடுமலை நக ராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கப்போவதாக செய்திக ளால் ஊராட்சி பகுதியில் உள்ள மக் களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இணைப்பதாக சொல் லும் ஊராட்சிகள் அனைத்தும், விவ சாய வேலை தங்களின் வாழ்வாதா ரமாக இருக்கிறது. மேலும், வேலை இல்லாத அதிக நாட்கள் ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து பயன்பெற்று வருகிறார்கள். இந் நிலையில், இந்த ஊராட்சிகளை நக ராட்சியுடன் இணைத்தால், நூறு நாள் வேலை திட்டம் இல்லாமல் போகும் என்கிற அச்சம் எழுந்துள் ளது. நகராட்சி விரிவுபடுத்தும் போது ஊராட்சியில் செயல்படுத் தப்படும் நூறுநாள் வேலைத்திட் டத்தை எந்த காரணமும் கொண்டு நிறுத்தக்கூடாது என அப்பகுதி எளிய மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். மேலும், இவ்வாறான இணைப் பின்போது வீடுகளுக்கான வரி உய ரும், காலியாக உள்ள இடத்திற்கு வரி, குப்பைகளுக்கு வரி புதிய வீடு கட்ட அனுமதிக்கு வரி என்று எது வும் அறியாத ஊராட்சி பகுதியில் இருந்து புதிய பிரச்சனை எழும் என்கிற அச்சமும் இம்மக்களிடையே எழுந்துள்ளது. அதேநேரத்தில், நக ராட்சியுடன் இணைக்கும்போது, சீரான குடிநீர் விநியோகம், முறை யாக குப்பைகளை அகற்றப்படும். சாலை, சாக்கடை வசதிகள் செய்து தரப்படும் என்கிற கருத்தும் மக்க ளிடையே எழுந்துள்ளது.