districts

img

10 ஆண்டுகள் கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திடுக

கோவை, ஜன. 8-  பத்து ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்திட வலியுறுத்தி  கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாண்டுகள் நிறைவு செய்த  ஆயுள் சிறைவாசிகளை பொது மன் னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி, மத,  பேதமின்றி விடுதலை செய்ய வேண் டும் என வலியுறுத்தி சனியன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் அக்கட்சியின் தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான தமிமுன் அன்சாரி தலைமை  தாங்கி பேசுகையில்,  தமிழக சிறைகளில் பத்தாண்டு கள் கடந்தும் விடுதலைக்கு வாய்ப் பில்லாமல் பலர் வாடி வதங்கி கொண் டிருக்கின்றனர். தமிழக சிறைச்சாலை களில் மனித உரிமைகள் மீறப்பட்டு பலரது வாழ்வு கேள்விக்குறியாகி உள் ளது. எனவே, சாதி, மத பேதமின்றி இந்த விவகாரத்தில் பொது மன்னிப் பின் கீழ் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆய்வு கைதிகளை விடுதலை  செய்ய வேண்டும். இது யாரையும் எதிர்ப்பதற்கான போராட்டமல்ல. சட்ட உரிமைகளையும், மனித உரிமை களையும் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியே. ஆகவே, சட்டத்தின் அடிப் படையில், மனிதாபிமானத்தின் அடிப் படையில் தமிழக முதல்வர் ஒரு நல்ல  முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.