கோவை, டிச.26- மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் புதனன்று (இன்று) மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர்கள் எம்.ஜெயபால், ஜே. ஜேம்ஸ் தலைமையில், கூட்டமைப் பின் நிர்வாகிகள் செய்தியாளர் களிடம் செவ்வாயன்று கூறுகையில், தமிழகத்தில் தொழில் துறையினர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட் டணம், நிலைக்கட்டணம், உச்ச நேர பயன்பாட்டுக் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 110 நாள்களில் இதுவரை 7 கட்ட இயக்கம் நடத்தியுள் ளோம். பிற மாநிலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு சலுகை வழங் கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. 12 கி.வாட் வரை பயன்படுத்தும் குறுந்தொழில்களுக்கு 3 பி டாரிப் பில் இருந்து 3 ஏ } 1 டாரிப்பில் மாற்றிக் கொடுக்க முன்வைத்த கோரிக் கையை ஏற்று, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி அரசாணை வழங்கியும், இதுவரை மின் இணைப்பை மாற் றிக் கொடுக்க மறுக்கும் மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அனைத்து கோரிக் கைகளையும் வலியுறுத்தி 8 ஆவது கட்டமாக மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம். கோவையில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பிற் பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போராட்டம் நடைபெறும். இதில், தொழில் அமைப்புகளின் பிர திநிதிகள், தொழிலாளர்கள், பல் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிக ளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருப் பதாக அவர்கள் தெரிவித்தனர்.