districts

img

கோவை: காட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்

கோவை, ஜன. 17- பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட குடியி ருப்பு பகுதியில் நுழைந்த காட்டு  யானைக்கூட்டம், வீடு ஒன்றை சேதப் படுத்தி சென்ற சம்பவத்தால் அப்ப குதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மேற்கு  தொடர்ச்சி மலை மற்றும் அதனை யொட்டி அடர்ந்த வனப்பகுதியில், யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. சமீப காலமாக  காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிரா மப்பகுதிகளுக்குள் நுழைகிறது. இந்நிலையில், கோவை மாவட் டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவ னூர் வனப் பகுதியில் தற்போது ஏராளமான யானைகள் முகாமிட்டுள் ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி  அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக ளுக்குள் வந்து செல்கின்றன. இந்நி லையில் செவ்வாயன்று வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண்  காட்டுயானை குடியிருப்பு பகுதியில்  புகுந்தது வனத்தை ஒட்டிய கிராமத் திற்குள் நுழைந்தது. பின்னர், அங்கி ருந்த ஒரு வீட்டின் முன்பு வைக்கப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது. இதனை அடுத்து அரு கில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி  யானையை அங்கிருந்து விரட்டினர்.  மேலும் இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத் துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.