districts

img

செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் – சேய் உயிரிழப்பு

தருமபுரி, நவ.13- பாஜக பிரமுகருக்கு சொந்த மான மருத்துவமனையில், மருத்து வர்கள் இல்லாமல், செவிலியர் பிரச வம் பார்த்ததால் தாயும், சேயும் உயி ரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கர்ப்பிணி உயிரி ழந்ததையடுத்து, உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு  தர்ணா போராட்டதில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.  தருமபுரி மாவட்டம், கடத்தூர்  அருகே உள்ள பழையபுது ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கோகுல கண்ணன் (27). விவசா யம் செய்து வரும் இவருக்கும், அஷ்தகிரியூர் பகுதியைச் சேர்ந்த  அம்சவேல் - நாகமணி தம்பதியின ரின் மகள் சந்தியா (24) என்பவ ருக்கும் கடந்த நான்கு வருடங்க ளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள  நிலையில் சந்தியா மீண்டும் கர்ப் பம் தரித்துள்ளார். தருமபுரி, குமா ரசாமிபேட்டை பகுதியிலுள்ள பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விஜயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சந்தியா கரு வுற்ற ஆரம்ப நிலையில் இருந்து  முறையான மருத்துவ பரிசோ தனை செய்து வந்துள்ளனர். இந் நிலையில், செவ்வாயன்று இரவு  சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட் டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து  மருத்துவர் இருக்கிறாரா? என  கோகுல கண்ணன் விசாரித்துள் ளார். அப்போது, “மருத்துவமனை யில் மருத்துவர் இருக்கிறார். உடன டியாக சிகிச்சைக்கு அழைத்து வாருங்கள்” என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புதனன்று அதி காலை 12.50 மணிக்கு சந்தியாவை  பாஜக தலைவருக்கு சொந்தமான  மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்துள்ளனர். ஆனால்,  மருத்துவமனையில் மருத்துவர் கள் இல்லாமல் செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர் மட்டுமே பணியில் இருந்ததாகவும், சந்தி யாவுக்கு அவர்களே பிரசவம் பார்த் துள்ளனர். அப்பொழுது சந்தியா வுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், சந்தியாவின் கணவர் மற்றும் அம் மாவிடம், “உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கையெழுத்து போடுங்கள்” என  அங்குள்ள மருத்துவ ஊழியர்கள்  தெரிவித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தை இறந்து பிறந்ததாக தெரி வித்துள்ளனர். மேலும், அதிக ரத் தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் சந் தியா மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், உடனடியாக ரத்தம்  தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.  இறுதி நேரத்தில், “இந்த மருத்து வமனையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்க போதுமான மருத் துவ உபகரணங்கள் இல்லை” எனக் கூறிய, மருத்துவமனை நிர்வாகத்தி னர், உறவினர்களுக்கு தெரிவிக் காமலேயே சந்தியாவை காலை  6.45 மணிக்கு தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி யடைந்த உறவினர்கள், தனியார்  மருத்துவமனையில் மருத்துவர் களை வைத்து முறையான சிகிச்சை  வழங்காமல், செவிலியர்கள் மருத் துவம் பாரத்ததால் தான் உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது. மேலும், தாய் - சேய்  உயிரிழப்பை மறைக்கவே அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகக்கூறி, சந்தியாவின் உற வினர்கள் சுமார் 200க்கும் மேற்பட் டோர் தனியார் மருத்துவமனை யின் பிரதான நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்திரி மருத்து வமனைக்கு வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார். மேலும், பிரச் சனைக்கு தீர்வு எட்டாததால், மருத் துவமனையை இழுத்து மூடி, நிர் வாகத்தின் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தியும், மெத்தனமாக செயல்ப டும் காவல்துறையை கண்டித்தும் உற வினர்கள் முழக்கமிட்டனர். மதியம்  3 மணி வரை நீடித்த போராட்டம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதியளித்ததின் அடிப்படை யில் முடிவுக்கு வந்தது.