districts

img

உடுமலை: எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - பரபரப்பு

உடுமலை, மார்ச் 15- உடுமலையில் அதிமுக முன் னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி உறவினரின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோத னையில் ஈடுபட்டனர்.   வருமானத்தை விட கூடுதலாக  ரூ.58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு உள் ளிட்ட 58 இடங்களில் செவ்வாயன்று  காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந் நிலையில், திருப்பூர் மாவட்டம் உடு மலை தாராபுரம் சாலையில் உள்ள  காந்திநகர் இரண்டாவது வீதியில்  உள்ள  ஓய்வு பெற்ற போக்குவ ரத்து ஊழியர் ஜெயபிரகாஷ் என்ப வரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.  ஜெயபிரகாஷ்க்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த  மகனான விஷ்ணுவர்தன் வழக்கறி ஞராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அவரது இளைய மக னான முகுந்தன் அரசு ஆரம்ப சுகா தார மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறார். சென்னையில் வசித்து வரும் விஷ்ணுவர்தன் முன் னாள் அதிமுக அமைச்சரான வேலு மணியின் உறவினருக்கு நெருக்க மான நண்பர் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடுமலை காந்தி நகர் விரிவு பகுதியில் உள்ள  விஷ் ணுவர்தனுடைய வீட்டில், கன்னியா குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை  டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான பல் வேறு இடங்களில் செவ்வாயன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலை யில், உடுமலையில் உள்ள விஷ்ணு வர்தன் வீட்டிலும் சோதனையில் ஈடு பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.