districts

img

பாடபுத்தகத்தில் என்.சங்கராய்யா வரலாறு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல் ஜன.10-  சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைக்க வேண்டும் என இந்திய மாண வர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், ராசிபு ரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி கிளைக்கூட்டம் ஆண்டகலூர் கேட்டில் கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜ சூரியா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் விருது பெற்ற முதல் தமிழர்  என்.சங்கரய்யாவின் வரலாற்றினை அரசு பாடத்திட்டங்களில்  சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக ஜன.23 ஆம் தேதியன்று ராசிபுரம் தபால் நிலை யத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நடத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் மாவட்டச்  செயலாளர் தே.சரவணன், மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர், கிளை நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.