districts

img

இருசக்கர வாகனம் திருட்டு: இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவை, மே 18- கோவை மாநகரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி உட்பட இருவரை போலீசார் கைது செய்த னர். கோவை, ராமநாதபுரம் பகுதியில் இரு  சக்கர வாகனங்கங்கள் தொடர்ந்து  திருடப் பட்டு வந்தன. இது தொடர்பாக, ராமநாத புரம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வந்தனர்.  இதில் கண்காணிப்பு கேமரா காட்சியில் இரு இளைஞர்கள் வாக னங்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தன.  இதன் அடிப்படையில் விசாரணை மேற் கொண்டனர். இந்த விசாரணையில் பால கிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் ஆகிய இரு வரும் வாகனங்களை திருடி விற்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.  இதனையடுத்து அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், திருப்பூர் அனுப்பர் பாளையம், ஆத்துப்பாளையம் சாலை, கோகுலம் காலனியைச் சேர்ந்த ஆர்.பால கிருஷ்ணன் (29) என்பவர் இந்து முன்னணி திருப்பூர் மாநகர தலைமை நிலையச் செய லாளராக உள்ளார். பல்லடம் ஆறுமுத் தாம்பாளையம் நாராணபுரம் பகுதியைச்  சேர்ந்த ஆர்.ராஜேஷ் (25) என்பவர் இரு சக்கர வாகனங்களைத் திருடியதும், அவரி டம் திருட்டு வாகனங்களை இந்து முன்னணி நிர்வாகியான பாலகிருஷ்ணன் வாங்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.