districts

சலூன் கடை உரிமையாளர் வெட்டி கொலை

கோவை, மார்ச் 14- கோவையில் சலூன் கடை உரிமை யாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை செல்வபுரத்தை அடுத் துள்ள  தெலுங்குபாளையம்புதூர் பகு தியை சேர்ந்த  பழனிச்சாமி என்பவ ரது மகன் சசிகுமார் (35). இவர் அதே  பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த துடன்,  பைனான்ஸ் தொழிலும் பார்த்து  வந்துள்ளார். இந்நிலையில், ஞாயி றன்று நள்ளிரவு சுமார் 1 மணியள வில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த  இரண்டு நபர்கள் அவரை வெளியே  வரசொல்லி அழைத்துள்ளனர். அப் போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென் றுள்ளனர். இச்சம்பவம் குறித்த அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம் பவ இடத்திற்கு வந்து சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கொலை சம்பவம் தொடர்பாக செல்வபுரம் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். முதல் கட்ட விசாரணை யில் சசிக்குமாரின் சலூன் கடையில் அவர்கள் இருவரும் வாடிக்கையாளர் களாக இருந்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சசிகுமாரிடம் ராம்ஜி 5 லட்சம் ரூபாய் பணத்தை வட் டிக்கு பெற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட சசிகுமா ருக்கும், ராம்ஜிக்கும் இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திர மடைந்த ராம்ஜி, நள்ளிரவில் சசிக் குமார் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்து முன்னணி பிர முகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த  காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.