உடுமலை, மார்ச் 11- உடுமலையை அடுத்த ஈசல் திட்டு பகுதியில் உடல்நலன் பாதிக் கப்பட்டவரை தொட்டில் கட்டியே தூக்கிச் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக-கேரள எல்லை அமைந்துள் ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள ஈசல்திட்டு மலை கிரா மத்தில் சுமார் 250 பேர் வாழ்ந்து வரு கின்றனர். ஜல்லிபட்டியை அடுத்து கொங்குரார் குட்டை மலையடி வாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் செங்குத்தான மலையில் உள்ள இந்த செட்டில்மென்ட் கிரா மத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. யாராவது ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட செங்குத்தான மலையில் கரடு முரடான பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மலையில் இருந்து கீழே இறங்கி ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை காலம் காலமாக தொடர் கிறது. இந்நிலையில், ஈசல்திட்டு கிரா மத்தில் வசித்து வரும் முருகன் என் பவரது மனைவி மாயம்மாள் (54) என்பவருக்கு வெள்ளியன்று திடீ ரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ளவர் கள் தொட்டில் கட்டி அதில் மாயம் மாளை படுக்க வைத்து 5 கிலோ மீட்டர் செங்குத்தான கரடு முரடான மலைப் பாதை வழியாக கொண்டு வந்து ஜல்லிபட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது, எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத இப்பகுதி யில், சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஆரம்ப சுகா தார நிலையத்தில் இருந்து மருத்து வர்கள், செவிலியர்கள் கிராமத் திற்கு வருகை தந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண் டும், என்றனர்.