தருமபுரி, ஜூன் 26- மலைவாழ் மக்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டிதர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பாப்பிரெட்டிப் பட்டி வட்ட 4 ஆவது மாநாடு ஆலமரத்துப்பட்டியில் ஜெகநா தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ. கண்ணகி, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட உதவி செயலாளர் ஏ.அமபுரோஸ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் தனுசன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம், மாதர் சங்க வட்ட தலைவர் பி.கிருஷ்ணவேணி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொண்ணுசாமி, டி.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், பாப்பிரெட்பட்டி வட்டத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத் தின் கீழ் 1969 ஆம் ஆண்டில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைத்துள்ளது. இவர்களுக்கு புதிய வீடுகள் உடனடியாக கட்டித்தர வேண்டும். ஆலமரத்தூர் கிராம மக்க ளுக்கு மயானம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாணியாறு நீர்தேக்கத் திட்டத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண் டும். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு பொறியியல் கல் லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் வட்டத்தலைவராக ஏ.பொண்ணுசாமி, வட்டச்செயலாளராக பழனிச்சாமி, பொருளாளராக வரதராஜன் உட்பட 15 பேர் கொண்ட வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.