districts

img

உதய சூரியனுக்கே வாக்களிப்போம்

கோவை, மார்ச் 27- திமுக ஆட்சி தான் எங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து  கொடுத்திருக்கிறது. எனவே உதய சூரியனுக்கே எங்கள் வாக்குகளை அளிப்போம் என  கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மாரிடம் மலைவாழ் மக்கள் உறுதி யளித்தனர். இந்தியா கூட்டணியின், கோவை நாடாளுமன்ற திமுக  வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மருதமலை முருகன் கோவிலில்  தரிசனம் செய்து விட்டு, மருதமலை யில் உள்ள மலைவாழ் மக்களிடத் தில் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது எங்களுக்கு தேவை யான அனைத்தையும் மு.க.ஸ்டா லின் தலைமையிலான அரசு செய் துள்ளது. எனவே எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என மலை வாழ் மக்கள் கூறினர். தொடர்ந்து, திமுக அரசின் திட்டங்களை பொது மக்களிடத்தில் எடுத்துக் கூறி மருதமலை அடிவாரத்தில் இருந்து ஐஓபி காலனி, நவாவூர் பிரிவு, வட வள்ளி, பாப்பநாயக்கன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட் பாளர், வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  இதைத்தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசுகையில், எல் லோருக்கும், எல்லாம் என்ற அடிப் படையில், மலைவாழ் மக்களிடமி ருந்து வாக்கு சேகரிப்பை தொடங்கி யுள்ளோம். அதிமுக 10 ஆண்டுகள்  இருந்தபோது செய்யாத வசதி களை, திமுக செய்துள்ளதாக தெரி வித்தார். மேலும், திமுக ஆட்சி யில் குடியிருப்பு வசதி, குடிநீர்  வசதிகள் செய்து கொடுக்கப்பட் டுள்ளதாக கூறிய அவர்கள், தற் போது கழிப்பறை வசதி கேட்டுள்ள னர் எனவும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.  ஆட்டுக்குட்டி பரிசு முன்னதாக, கோவை நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர்  கணபதி ராஜ்குமார் மருதமலை யில் புதனன்று பிரச்சாரத்தை துவக் கினார். அப்போது, உடன் இருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம், திமுக ஐடி  விங் மருதமலை பகுதி ஒருங்கி ணைப்பாளர் விக்னேஷ் ஆட்டுக் குட்டி வழங்கினார். இந்த புகைப்ப டம் தற்போது, பார்த்திபன் - வடி வேல் காமெடி மாதிரி, பார்த்திபன் அரிவாளுடன் இருப்பது போன் றும், வடிவேல் கழுத்தில் கயிறு  கட்டி இழுப்பது போன்ற படத்து டன், “கோவை மக்கள் - ஆடு” என  சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்த ளங்களில் வைரலாகி வருகின்றது.  கோவைக்கு பாஜக அண்ணா மலை அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் டிஆர்பி ராஜா, “கோவை  மக்களுக்கு பிரியாணி ரெடி” என கூறியது டிரெண்டிங் ஆனது. தற் போது இந்த ஆட்டுக்குட்டி வழங் கியது டிரெண்டிங் ஆகி வருகின் றது.  இந்த பிரச்சாரத்தின்போது, கோவை மாநகர் மாவட்டச் செயலா ளர் நா.கார்த்திக், திமுக ஐடி விங்  மாநில துணைச்செயலாளர் மகேந் திரன், காங்கிரஸ் மாநில செயல்த லைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், விடு தலை சிறுத்தைகள் குமணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவ சாமி மற்றும் கூட்டணி கட்சி தலை வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.