பொள்ளாச்சி, மே 24- ஆனைமலை தம்மம்பதி கல்லாங் குத்து பழங்குடியின கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித்தரக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆனை மலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக் குட்பட்ட தம்மம்பதி, கல்லாங்குத்து பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் தங்களது பகுதியில் தங்க ளுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் மதிப் பில் வீடு கட்டித் தருவதாக கூறி தர மற்ற அஸ்திவாரத்தை அமைத்து தங் களை ஏமாற்றிய, வாகை சேவை அறக் கட்டளையின் நிறுவனர் ரவிச்சந்திரன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அஸ்திவாரத்துடன் ஐந்து வருடங்களாக வெறுமனே கிடக்கிற தங்களது வீட்டுமனைகளில் வீடு கட்டிட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசே பாதுகாப் பான முறையில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி யிடம் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடி யின மக்கள் மனு அளித்தனர். இம் மனுவை பெற்றுக் கொண்ட ஆனை மலை வட்டாட்சியர் மனுவின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் ஏ. அம்மாவாசை, அம்சவேணி, சிபிஎம் ஆனைமலை தாலுகா குழு உறுப்பினர் கள் ஆர்.தங்கவேல், ஏ. முத்துச்சாமி மற்றும் பழங்குடியின மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.