தருமபுரி, ஜன.6- மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தினர் வெள்ளியன்று பாப்பிரெட்டிப் பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட நொனங்கனூர் மற்றும் ஆலமரத் தூர் ஆகிய கிராமங்களில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நொனங்கனூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த மயானப் பாதை யை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, தன் நிலத்தோடு இணைத்து கொண் டார். இதேபோல், ஆலமரத்தூர் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிர மிப்பு செய்துள்ளார். இந்நிலை யில் மயானத்தையும், மயானப் பாதையை மீட்கக்கோரி பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாடசியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க தரும புரி மாவட்ட தலைவர் அம்புரோஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநிலக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட செயலாளர் கே.என். மல்லையன், வட்டச் செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் சி.வஞ்சி, வட்ட தலைவர் தீர்த்தகிரி, பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பாப்பிரெட்டிபட்டி வட்டச் செய லாளர் தி.வ.தனுஷன் வாழ்த்துரை வழங்கினார். குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் செல்வராஜுடன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் பேச்சுவார்தையில் மயானத் தையும், மயான வழிப்பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.