districts

img

குளறுபடிகளுடன் கட்டப்படும் பாலம்

திருப்பூர் அருகே சரியான முன்திட்ட மிடல் இல்லாமல் ஏகப்பட்ட குளறுபடி களுடன் பாலம் ஒன்று கட்டப்பட்டு வரு கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சா லைத் துறை கவனத்திற்கு கொண்டு சென்றும், அந்த பாலத்தின் வடிவ மைப்பை மாற்றி அமைக்கவோ, பாலத் தின் பணிகளை கைவிடவோ அதிகாரி கள் மறுத்து வருகின்றனர். இதனால் போராட்டத்துக்குத் தள்ளப்படும் நிலை யில் மக்கள் உள்ளனர். திருப்பூர் கல்லூரி சாலையில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் சாலையில் கணியாம்பூண்டி ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியில் பொங்கல் வழித் தோட்டம் பிரியும் இடத்தில் பாலம்  ஒன்று கட்டப்பட்டு வருகிறது.ஏற் கனவே இந்த இடத்தில் சாலை மிகவும் தாழ்வாக இருப்பதால் இதன் குறுக்காக மழைநீர் வழிந்தோடுவதற்கு இரு கண்கள் கொண்ட பாலம் கட்டப்படு கிறது. இந்த பாலம் அமைக்கும் இடத் திற்கு வட பகுதியில் முருகம்பா ளையம், கணியாம்பூண்டி சாலை அமை ந்துள்ளது. அப்பகுதியில் இரு குட்டை கள் உள்ளன. இந்த குட்டைகள் நிரம்பி  அங்கிருந்து வெளியேறும் நீர், கிழக்கு - மேற்காக இருக்கும் வஞ்சிபாளை யம் சாலையைக் கடந்து ரயில்வே பாலத்தின் கீழே இருக்கும் நீர்வழிப் பாதை வழியாக தெற்கு நோக்கி பாய்ந்து சென்று அங்குள்ள மற்றொரு குட்டையில் கலக்கும். பின்னர், இந்நீர் கௌசிகா நதியைப் போய்ச் சேருகிறது. இந்த சாலையில் தண்ணீர் கடந்து செல்லக்கூடிய தாழ்வான பகு தியாக இருப்பதால் பாலம் அமைக்க வேண்டியது அவசியமாகத்தான் உள் ளது.

நீர்வழிப் பாதைக்கு புறம்பாக

இந்நிலையில், இங்குள்ள நீர் வழிப்பாதையின் போக்கு, வடமேற்கில் இருந்து சாலையைக் கடந்து தென் கிழக்காகச் செல்லும் இயற்கையான அமைப்பு இருக்கிறது. ஆனால் நெடுஞ் சாலைத் துறை பொறியாளர்கள் வடிவ மைத்திருக்கும் பாலம் இந்த இயற்கை அமைப்பைக் கருத்தில் கொள்ளாமல், வடமேற்கு - தென்கிழக்கு என்பதற்கு மாறாக, எவ்வித சாய்மானமும் இன்றி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நேர்கோட்டில் பாலத்தின் கண்களை அமைத்துள்ளனர். எனவே நீர்வழிப் பாதையின் வாட்டத்திற்கும், பாலத்தின் அமைப்பிற்கும் சம்பந்தமே இல்லை. இதனால் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் இதன் வழியாக நீர்  கடந்து செல்ல முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. 

ரயில் பாதையை பாதிக்கும்

அத்துடன், வடக்கில் இருந்து வரும்  தண்ணீர்  தெற்கு நோக்கி செல்லும் பகுதியில் இந்த பாலத்தை அடுத்து நீர்வழிப் பாதைக்கு செல்வதற்கு வழி  இல்லை. பாலத்தை ஒட்டி ஒரு அடி  தூரம் இடைவெளியில் ரயில்வே இடத் தின் எல்லைக்கல் உள்ளது. வடக்கில் இருந்து மழைக் காலங்களில் தண்ணீர் பாய்ந்து வந்தால் இந்த பாலத்தின் கண்கள் வழியாக தெற்கே செல்ல முடியாமல் ஒரு அடி தூரத்திலேயே தடுக்கப்படும். அப்போது அதிக அழுத்தத்துடன் தண்ணீர் பாய்ந்து வருமானால் ரயில்வே இருப்புப் பாதை அமைந்துள்ள மேட்டுப் பாங்கான மண்பகுதியில் அரிப்பு ஏற்பட வும், அதனால் இருப்புப் பாதைகளின் கீழ்பகுதி மண் அரிப்பினால் துண்டிக்கப் படவும் கூடிய ஆபத்து உள்ளது. நாளொன்றுக்கும் 140க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்லக்கூடிய இருப்புப் பாதை அருகே எவ்வித அறி வியல் கண்ணோட்டமும் இல்லா மலும், ரயில்வே நிர்வாகத்தை கலந்தா லோசிக்காமலும் நெடுஞ்சாலைத்  துறை யினர் தான்தோன்றித்தனமாக இந்த வேலையைச் செய்திருப்பது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடி யதாக உள்ளது.  

குடியிருப்பை துண்டிக்கும் உயரம்

இந்த பாலத்தின் மற்றொரு அம்சம், இதன் உயரம். மொத்தம் 10 அடி உயரத்தில் இப்பாலம் அமைக்கப் படுகிறது. இந்த பாலத்தின் உயரத் திற்கு ஏற்ப வஞ்சிபாளையம் சாலை யின் கிழக்கு, மேற்கு இரு பகுதி களிலும் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மண்ணைக் கொட்டி சாலையை மேடுப டுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அப்படி உயரத்தை அதிகரிக்கும்போது, சாலையின் வட பகுதியில் இருக்கும் கணியாம்பூண்டி, முருகம்பாளையம் பகுதியில் இருந்தும், தென் பகுதியில் பொங்கல்வழித் தோட்டம் சாலை பகுதியில் இருந்தும் இந்த சாலைக்கு வருவது மிகவும் கடினமாகிவிடும். அதாவது தற்போதைய தரை மட்டத் தில் இருந்து பாலம் பகுதியை உயர்த் ்தும்போது, இருபுறமும் இருக்கும் அணுகு சாலைகளில் இருந்து ஏறத் தாழ ஐந்தாறு அடி (ஒரு ஆள் மட்டம்) உயர்த்தப்பட்டு விடும். அப்படிச் செய் தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும் இரு பகுதி சாலைகளும் பயன்படுத்த முடி யாத நிலை ஏற்படும்.

போக்குவரத்துக்கு பாதிப்பு

குறிப்பாக மேற்கு வஞ்சிபாளை யம், சேரன் நகர், செந்தில் நகர், பொங்கல்வழித் தோட்டம், மங்கலம், வேட்டுவபாளையம், வடுகன் காளி பாளையம், வெள்ளஞ்செட்டிபாளை யம், சாமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாலத்திற்கு கீழாக வடக்கு நோக்கி கல்லூரி சாலைக்கு வருவது தடைப்பட்டு விடும். இந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பனியன் தொழில் மற்றும் தங்கள்  அன்றாட பணிகளுக்கு வந்து செல்கின்ற னர். அருகாமையில் கணியாம்பூண்டி யில் இருக்கும் மைக்ரோஸ் கிட்ஸ் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான குழந்தை கள் இப்பகுதியின் வழியாக வந்து செல் கின்றனர். அதேபோல் வடபகுதியில் முருகம்பாளையம் சாலை அருகே மயா னம் உள்ளது. தென் பகுதியில் இருந்து இங்கு வருவதற்கும் ரயில்வே கீழ் பாலம் (நீர்வழிப் பாதை) பயன்பட்டு வரு கிறது. இந்த பாலத்தின் தற்போதைய வடிவமைப்பிலேயே பணிகளை நிறைவேற்றினால், இந்த சாலையின் குறுக்காக, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வர முடியாதது போலவே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதும் தடைப்படும்.

அதிகாரிகள் அலட்சியம்

நீர்வழி பாதைக்கும் பாதிப்பு, வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பு, இதன் சுற்று வட்டார மக்கள் குடியிருப் புகளும் துண்டிக்கப்படும் நிலை என பல்வேறு பாதிப்புகள் இருப்பதைப் பற்றி நெடுஞ்சாலைத் துறையினர் கவ னத்துக்கு கொண்டு சென்றும் பிரச்ச னையை தீர்ப்பது பற்றி அவர்கள் அக்கறைப்படவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம் நடத்தினர். சாலை மறியல் நடத்தவும் முயற்சி மேற்கொண்டனர். அத்துடன் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் நேரில் இந்த இடத்துக்கு வருகை தந்து பார்வை யிட்டு நெடுஞ்சாலைத் துறை பொறியா ளர்களிடமும் பேசினார். இத்தனை முயற்சிகளுக்கும் பிறகு நெடுஞ்சாலைத் துறையினர் உரிய மாற்று வடிவைப்பை ஏற்படுத் தவில்லை. ஏற்கெனவே ஏறத்தாழ 50 சதவிகித பணிகள் நடைபெற் றிருப்பதால் அதை அப்படியே தொடர் ந்து செய்து முடித்துவிடுவது என்ற முடிவில் இருப்பது போல் தெரி கிறது. கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் நேரில் பார்வையி டபோது, நெடுஞ்சாலைத் துறை யினரிடம் உள்ளூர் மக்களின் வசதி யையும் கருத்தில் கொண்டு உரிய மாற்று வழிமுறையைக் கடைப்பி டிக்கும்படி அறிவுறுத்தினார். அதன் பிறகு இந்த பாலத்திற்கு அருகிலேயே நீர்வழிப் பாதைக்கு ஏற்ப,  இரண்டு கன  ரக குழாய்களை வடகிழக்கில் இருந்து தென்மேற்கு நோக்கி பதித்துள்ளனர். அது மட்டுமே உருப்படியான வேலை யாக உள்ளது. 

மாற்றம் அவசியம்

ஆனால் பாலத்தின் உயரத் தைக் குறைப்பதற்கோ, நீர்வழித் தடத் திற்கும், பொது மக்கள் போக்கு வரத்திற்கும் ஏற்ப வடிவமைப்பை சீர்தி ருத்துவதற்கோ நெடுஞ்சாலைத் துறையினர் தயாராக இல்லை. மறு பரிசீலனை செய்யாமல், இப்ப ணிக்காக செலவிட்ட பணம் இழப்பு ஏற்ப டும் என்ற ஒற்றை நோக்கத்தில் தொடர் ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி முடித்தால் அது இந்த இடத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாறி விடும் என்று இப்பகுதி மக்கள் கூறு கின்றனர். இத்தனைக்குப் பிறகும் அதி காரிகள் படிப்பினை பெறாமல் உள்ள னர். இந்த பாலம் விபரீதமான விளை வுகளுக்கு காரணமாகிவிடும். எனவே இப்பாலத்தை கட்டும் பணியைக் கைவிட வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்று மக்கள் ஒருமித்த  குரலில்  கூறுகி ன்றனர். இனியாவது செவி சாய்ப்பார் களா கோட்டப் பொறியாளரும், நெடுஞ் சாலைத் துறையினரும்?

-வே.தூயவன்