districts

img

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கைது

ஈரோடு, மே 9- முரண்பாடுள்ள பட்டியலை மாற்றிய மைத்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பணி யாளர்கள் கைது செய்யப்பட்டனர். நெடுஞ்சாலை துறையில் ஒட்டுமொத்த  முதுநிலை பட்டியல் விதிகளைப் பின்பற்றா மல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முரண் பாடுள்ள பட்டியலை மாற்றியமைத்து வெளி யிட வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 4 ஆம்  தேதி முதல் கோபி கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் கோட்ட தலைவர் என்.முருக வேல் தலைமையில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றா லும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, 6 நாட்களாகப் போராட் டம் தொடர்ந்தது. இந்நிலையில், திங்களன்று  குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள் உள் ளிட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையின் கட்டுப் பாட்டிலிருந்த நிலையில், 4 ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. உணவை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடை யில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனைத்தொடர்ந்து, கைது  செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர்.  இதனையடுத்து, மீண்டும் போராட்ட களத் தில் இரவு 10 மணிக்கு ஊழியர்கள் வந்தனர்.  6 ஆவது நாளாக போராட்டம் செவ்வா யன்றும் தொடந்தது. மாநிலத் தலைவர் பால சுப்ரமணியன், பொதுச்செயலாளர் அம்ச ராஜ், மாநிலப் பொருளாளர் தமிழ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முதல்வர் தலையிட வலியுறுத்தல் 6 ஆவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, நீதிதேவதை கையில் தரா சுடன் போராட்டம் நடைபெறும் நிலையில்  போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்செய லாளர் அம்சராஜ் கூறுகையில், கோட்ட பொறி யாளர் சுந்தரமூர்த்தியின் தவறான நடவ டிக்கையை அங்கீகரித்து, ஆய்வு எதுவும்  செய்யாமல் விதிமீறல் இல்லை என சொல் கிறார்கள். சட்டத்தின்படி நடக்கும் ஆட்சியில் எங்களுக்கு நியாயம் வழங்க முதல்வர் தலையிட வேண்டும். முறைகேடில்லாமல் முதுநிலைப்பட்டியல் வெளியிட வேண்டும். சிறப்பு நிலை எய்தியவர்களுக்கு உரிய ஊதிய பலன்களை வழங்க வேண்டும். கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படாத வரை போராட்டம் தொடரும்  என்று தெரிவித் தார்.