districts

பேராசிரியர்களிடம் உயர்கல்வித்துறை தனிக்குழு விசாரணை

உதகை, பிப்.21- உதகை அரசு கல்லூரி மாண வர்களிடம், பேராசிரியர்கள் பணம்  பெற்ற விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை தனிக்குழுவினர் நேரில் விசாரணை மேற்கொண்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் நீலகிரி  மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கள் மட்டுமின்றி, வெளி மாவட் டங்களைச் சார்ந்த ஏராளமானோர் படித்து வருகின்றனர். இக்கல்லூ ரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக் கான இளங்கலை மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வில்  மாணவர்கள் தங்கள் விண்ணப் பித்த பாடப்பிரிவு கிடைக்காத போது, அடுத்து கிடைத்த பாடப்பி ரிவில் சேர்ந்துள்ளனர். இதன்பின் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின் போது அவர்கள் விரும்பிய பாடப் பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு  அந்த பாடப்பிரிவிற்கு மாறியுள்ள னர். இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறு வதற்காக பேராசிரியர் ஒருவர், மாணவர்களிடம் 5 ஆயிரம் முதல்  20 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதைத்தொடர்ந்து கூகுள்பே  மூலம் பணம் அனுப்பிய செல் போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம், முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குநரகம், தமிழக காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம்  மாணவ, மாணவிகள் புகார் பதிவு  செய்தனர். மேலும், பேராசிரியர், மாணவர்களிடம் பணம் கேட்ட  ஆடியோக்கள் சமூக வலைத்த ளங்களில் பரவியுள்ளது. இதனிடையே தமிழக உயர்கல் வித்துறை செயலாளர் மற்றும் கல் லூரி கல்வியியல் இயக்குநர் ஆகி யோர் உத்தரவின் பேரில், கோவை  மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் கலைச்செல்வி உதகை அரசு கலைக்கல்லூரிக்கு நேரில் சென்று மாணவ, மாணவி கள், 4 பேராசிரியர்கள் மற்றும்  கல்லூரி முதல்வரிடம் விசாரணை  மேற்கொண்டனர். அதனடிப்படை யில் கல்லூரி முதல்வர் அருள் அண் டனி, பேராசிரியர் ரவி ஆகியோர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட னர். இந்நிலையில், உதகை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான் றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக வும், பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வும் புகார்கள் எழுந்தன. இதுதொ டர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற் போது பணம் பெற்றது தொடர் பாக மாணவர்கள் மற்றும் பேராசி ரியர்களிடம் அரசு நியமித்த உயர் கல்வித்துறை தனிக்குழு விசா ரணை நடைபெற்றது. கடந்த இரு நாட்களாக ஜெக தீஸ்வரி, சேஷாதிரி, பவித்ரன்  ஆகியோர் அடங்கி தனிக்குழு வினர் உதகை அரசு கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற் றும் கல்லூரியில் பணிபுரியும் பணி யாளர்களிடம் விசாரணை நடத்தி னர். இதன்பின் மாணவர்களை மிரட்டி விலை பேசியது, நிதி முறை கேடு, பல்வேறு காரணங்களைக் கூறி மாணவர்களிடம் நிதி வசூல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் பெய ரில் நடந்த முறையற்ற வசூல் குறித்து விசாரணை நடத்தினர். இக்குழுவினர் நிருபர்களிடம் எந்த  கருத்தும் தெரிவிக்காமல் விசார ணையை முடித்து சென்றனர்.