districts

img

ஊட்டியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஜூன் 21- ஊட்டியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிப்புக் குள்ளாகியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி  மழை அளவு, 130 செ.மீ.,  நடப்பாண்டு கோடை மழை மே மாதத்துடன் முடிந்தது. கோடை மழை சராசரி அளவு, 30 செ.மீ., இதில், 28.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஜூன், ஜூலை  மாதங்கள் தென் மேற்கு பருவ மழை கால மாகும். தென் மேற்கு பருவ மழை சராசரி அளவு, 50 செ.மீ.,  பொதுவாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவமழை துவங்கும். நடப் பாண்டில், மூன்று வாரங்கள் கடந்தும் பருவ மழை தாமதமாகியுள்ளது. இந்நிலையில், புதனன்று காலை, 11:00 மணி முதல், தொடர்ந்து மழை பெய்து வருவ தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. நகரில் ஆங்காங்கே பாதாள சாக் கடையில் அடைப்பு ஏற்பட்டது. மருத்துவ மனை சாலை, பேருந்து நிறுத்தம் மற்றும்  படகு இல்லம் சாலைகளில் தண்ணீர் தேங்கிய தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மழையால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங் கள் வெறிச்சோடி காணப்பட்டன.