districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கட மான் உயிரிழப்பு

கோவை, ஜூலை 29- வால்பாறை அடுத்த கருமலை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செக் டேம் பகுதி யில் கட மான் உயிரிழந்துள்ளது.  கோவை மாவட்டம்,  வால்பாறை அடுத்த  கருமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள  நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர் ஆதார மாக விளங்கக்கூடிய செக்டேம் பகுதியில் நள்ளிரவு தண்ணீர் குடிப்பதற்காக வந்த  கடமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந் துள்ளது. வெள்ளியன்று காலை அப்பகுதி யில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது செக் டேம் அணைக்கட்டில் தொங்கியபடி இருந்த கடமனை கண்டு  உடனடியாக வனத்துறைக்கு தெரிவித் துள்ளனர்.  இதனையடுத்து, வனத்துறை மற்றும் நக ராட்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து அதன் உடலை மீட்டனர். இந்த  கடமான்  நான்கு முதல் ஐந்து வயது வரை  இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித் தனர். இதனைத்தொடர்ந்து, அதே பகுதியில்  ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. 

கன மழை - அறுவடை செய்ய முடியாத விவசாயிகள்

உதகை, ஜூலை 29- உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகளை மழை யால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயி கள் பரிதவித்துள்ளனர். உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவை தற்போது விளைந்து அறு வடை செய்யும் நிலையில் உள்ளன. இந் நிலையில், உதகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள மலை காய் கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயி களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.  உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  அறுவடையாகும் காய்கறிகள் உள்ளூர் சந்தை மட்டுமின்றி மேட்டுப்பாளையம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு விற்ப னைக்காக கொண்டு செல்லப்படும். உதகை யில் கனமழை காரணமாக அறுவடை பணி கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, உதகை சந்தைக்கு காய் கறிகள் வரத்து தற்போது குறைந்து உள்ளது.  அங்கு நாள்தோறும் சாராசரியாக, 25  டன்கள் வரை காய்கறி வரத்து இருக்கும்.  ஆனால் தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன. எனவே, உதகை பகுதியில் காய்கறி களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

போதை மாத்திரை விற்பனை: 8 பேர் கைது

கோவை, ஜூலை 29- கோவையில் போதை மாத்திரை விற் பனை செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.  கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருளை ஒழிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில், கோவை கரும்புக்கடை கருப்ப ராயன் கோயில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்வ தாக கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு,  இருந்த கும்பல் போதை மாத்திரை மற்றும்  கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (27), கணபதி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பிசிஏ 3ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் டேவிட் மைக்கேல் (20), கணபதி செக்கான் தோட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் எட்வின் சார்லஸ்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள், 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், காளப்பட்டி ரோட்டில் உள்ள  கல்லூரி அருகே போதை மாத்திரை விற் பனை செய்த மயிலாடுதுறையை சேர்ந்த வினோத்குமார் (19) என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஆர்.எஸ்.புரம் மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையம் ரோடு சென்ட்ரல் தியேட்டர் அருகே வாலிபர் ஒருவர்  சந்தேகம்படும் படி நின்றிருந்தார்.

அவரை  பிடித்து சோதனை செய்ததில் அவர் போதை  மாத்திரை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற சிவானந்தாகாலனி டாடாபாத்தை சேர்ந்த ஓட்டுநர் தனசேகரன் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமி ருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய் யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  வெரைட்டிஹால் ரோடு போலீசார் நடத்திய சோதனையில், சிஎம்சி காலனி ஆட்டோ நிலையம் அருகே போதை மாத் திரை விற்பனையில் ஈடுபட்ட கோவை மணிய தோட்டத்தை சேர்ந்த இறைச்சிக் கடை ஊழியர்  நவ்சாத் (24), சலீவன் தெருவை சேர்ந்த  அருள் செல்வம் (25), பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராம் பிரசாத் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது  செய்தனர். அவர்களிடம் இருந்து 50 போதை  மாத்திரை, 50 கிராம் கஞ்சா மற்றும் ஒரு  சிரிஞ்ச், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையில் வெள்ளியன்று ஒரே நாளில் மாநகர போலீசார் நடத்திய சோதனையில் 770 போதை மாத்திரை விற்பனை செய்த 8  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பத்தாம் வகுப்பு தோல்வி   தற்கொலைக்கு முயன்ற மாணவி

நாமக்கல், ஜூலை 29- நாமக்கல் அருகில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், தற்கொலைக்கு முயன்ற  மாணவியை, கட்டட  மேற்பார்வையாளர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே  கோனேரிப்பட்டி மேட்டுகாடு பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி  பொதுத்தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.  கடந்த மாதம்  மீண்டும்  தனித்தேர்வு எழுதிய நிலையில்,  தற்போது தேர்வின் முடிவு வந்தது. இதில் தேர்ச்சி பெறாத தால் பெற்றோர்கள் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.     இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அதே  பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, மாணவி கிணற்றில் குதிப்பதை  பார்த்த ஒரு பெண் கூச்சலிடவே, அங்கு அருகில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த கட்டட மேற்பார்வையாளர் கிணற்றில் குதித்து அந்த மாணவியை உயிருடன் மீட்டுள் ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் வரவ ழைக்கப்பட்டு அறிவுரை கூறி, மாணவி பத்திரமாக வீட்டுக்கு  அனுப்பப்பட்டார். 

கெட்டுப்போன 67 கிலோ இறைச்சி பறிமுதல் 11 உணவகங்களுக்கு அபராதம்

சேலம், ஜூலை 29- சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடை களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு  மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.  சேலம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி,  ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 54 இறைச்சிக் கடைகளில்  உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கெட்டுப் போன 17 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 50 கிலோ மீன் ஆகியவற்றை கண்டறிந்தனர். உடனடி யாக அவற்றை அதே பகுதியில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் 5800 கிலோ தடை  செய்யப்பட்ட நெகிழி பைகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து அதே பகுதியில் உள்ள 11 உணவகங்கள்  சோதனை மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையிலும் நெகிழி பயன்படுத்தியதாக தலா ரூ.2000 விதம் 16 ஆயிரம்  ரூபாய் அபராதம் வீதித்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில்  இறைச்சி பயன்படுத்திய மூன்று உணவு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். 

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் எம்.பி.ஏ. பாடப்பிரிவு சேர்ப்பு

திருப்பூர், ஜூலை 29- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிதாக  எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்படவுள்ளது.  இது குறித்து கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-24 ஆவது கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. பாடப்பிரிவைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. எம்.பி.ஏ. பட்ட வகுப்பில் சேர்வதற்கு டான்செட் எழுதிய மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தேர்வு செய்ய வேண்டும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கல்லூரி விருப்பத் தேர்வு மற்றும் கலந்தாய்வு இணைய வழியில் 29 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை இணையதளம் https://cgac.in/ மூலமாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் உடைப்பு போராட்டம்  31 கிராமங்களில் நடத்த திட்டம்

திருப்பூர், ஜூலை 29 - தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  கூடிய வகையிலான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்  1 முதல் 31ஆம் தேதி வரை 31 கிராமங்களில் சிதறு தேங்காய்  உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கட்சி சார்பற்ற  விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அறி வித்துள்ளது தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய நிலையில்  தமிழக அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம்  கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை கொள்முதல் விலையை 140 ரூபாயாக உயர்த்தி  தர வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக  தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்த இருப்பதாக ஏர்முனை இளைஞர் அணியின் செயல்  தலைவர் வெற்றி கூறினார்.

ரேசன் அரிசி கடத்தியவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது

திருப்பூர், ஜூலை 29 - திருப்பூரில் ரேசன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்டவரை  குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர  காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். திருப்பூர் பல்லடம் சாலையில் கடந்த ஜூலை 10 அன்று  வாகனத்தில் 1850 கிலோ அளவுள்ள ரேசன் அரிசியை கடத்தி  வந்த கோவை மாவட்டம், மாதம்பட்டி, குப்பனூர் கிராமம், ஊர்  கவுண்டர் தெருவைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன் (வயது 32)  என்பவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் குடிமைப் பொருள்  வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவரை தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு  உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திகேயனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வெள்ளியன்று ஆணை  வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் 2023ஆம் ஆண்டில்  இதுவரை மொத்தம் 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி ஏலம்

திருப்பூர், ஜூலை 29- திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த  மூலனூர் ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்தில் பருத்தி விலை கடந்த வாரத்தை விட  குவிண்டாலுக்கு ரூ. 450  உயர்ந்தது. இங்கு வாரந்தோ றும் வியாழக்கிழமை பருத்தி  ஏலம் நடைபெற்று வருகி றது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது.  726 விவசாயிகள் தங்களு டைய 8,051 பருத்தி மூட்டை களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 2,491 குவிண்டால். விலை குவிண்டால் ரூ. 6,650 முதல்  ரூ.7,789 வரை விற்பனையா னது. சராசரி விலை ரூ. 7,200.  கடந்த வார சராசரி விலை ரூ.  6,750.

மங்கலம் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கழிப்பறைகள் கட்டித்தர கோரிக்கை

திருப்பூர், ஜூலை 29 - திருப்பூர் அருகே மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கூடு தல் கழிப்பறைகள் கட்டித்தர அரசுக்கு கோரிக்கை விடப்பட் டுள்ளது. இப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் பொறுப்பு  தலைமை ஆசிரியர் ஷோபனா தலைமை ஏற்றார். மங்கலம்  ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பங்கேற்றார். இக்கூட்டத்தில் பள்ளிக்கு உடனடித் தேவையாக பெண்  குழந்தைகளுக்கு கூடுதலாக கழிப்பறை தேவைப்படுகிறது. எனவே புதியதாக கழிப்பறைகள் கட்டித்தர அரசிடம் வேண் டுவது, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட அரசிடம் நிதி  ஒதுக் கீடு கோருவது, புதிய உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உரு வாக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், ஆய்வகத் திற்கு மும்முனை மின்சார இணைப்பு பெறுவது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக பெற்றோர் -  ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  புதிய தலைவராக முகமது அப்பாஸ், மற்றும் பொருளாளராக  நாசர் அலி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தாஹா  நசீர், திருப்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜானகி எபிசி யண்ட் மணி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எடப்பாடி  பாபு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்  ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கள், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் மூலம் மோசடி

கோவை, ஜூலை 29- கோவையில் ஆன்லைன் மூலம் இளைஞரிடம் ரூ.14  லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, ஓம்நகர் சிவாஜி காலனியை சேர்ந்தவர் தீபக்  (22). இவர் கார், இருசக்கர வாகனங்களுக்கு வாட்டர் வாஷ்  செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வாட்ஸ்  ஆப் எண்ணிற்கு கடந்த மாதம் குறுஞ்செய்தி வந்தது.  அதில், பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட் டிருந்தது. இதனையடுத்து தீபக், அதில் உள்ள லிங்க் கிளிக்  செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார். பின்னர் அவரை  தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க லாம் எனவும், கமிசன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.  இதனையடுத்து தீபக், அந்த நபர் கூறிய வங்கி கணக் கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பிய நிலையில், லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கை தொடர்பு கொண்ட நபர்  அதிகளவில் முதலீடு செய்தால் இதனை விட அதிக லாபம்  கிடைக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தீபக்  சிறிது, சிறிதாக ரூ.14,12,500 முதலீடு செய்தார். அதன்பின்னர்  அவருக்கு எந்த விதமான கமிசனும், லாபத் தொகையும் கிடைக்கவில்லை.  பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடிய வில்லை. ஆன்லைன் வேலை என கூறி மொத்தமாக ரூ.14,12,500 சுருட்டி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தீபக், கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பேரிடர் கால ஒத்திகை

கோவை, ஜூலை 29- பேரிடர் காலம் மற்றும் விபத்தின் போது எவ்வாறு செயல் படுவது குறித்த மருத்துவ ஒத்திகை நிகழ்வு கோவையில் நடைபெற்றது.  கோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பேரிடர்  கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விபத்து காலங் களில் எவ்வாறு விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி  எவ்வாறு அளிப்பது போன்ற செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.   இதில் பேருந்தில் 21 பயணிகளும், ஒரு ஓட்டுநரும் கலந்து  கொண்டனர். பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர்   மின்கம்பத்தில் மோதி நிற்பது போன்று ஒத்திகை நடை பெற்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்  பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கி கொண்டது போன்றும்  ஒத்திகை நடத்தப்பட்டன. 

போலி நகை கொடுத்து மோசடி

கோவை, ஜூலை 29- கோவையில் போலி நகைகளை கொடுத்து நகைப் பட்டறை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மோசடி நடை பெற்றது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கோவை, கடைவீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (56). நகை வியாபாரி. இவர் பெங்களூரு நகைக்கடையை சேர்ந்த  சுனில் (50) என்பவரிடம் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட் டிருந்தது.  இந்நிலையில், வெள்ளியன்று கோவை வந்த சுனில்  963 கிராம் எடையிலான தங்க நகைகளை தியாகராஜனிடம் கொடுத்து விட்டு, அவரிடமிருந்து 1003 கிராம் தங்க கட்டிகளை  வாங்கினார். பின்னர் 963 கிராம் நகைக்கு, மீதம் கொடுக்க வேண்டிய பணத்தை சிறிது நேரத்தில் கொண்டு வந்து தரு வதாக சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி  வரவில்லை.  இதனால் சந்தேகமடைந்த தியாகராஜன், சுனில் கொடுத்த  தங்க நகைகளை சோதனை செய்தார். அப்போது அவர்  கொடுத்து சென்ற 963 கிராம் தங்க நகையும் போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகராஜன் கடைவீதி  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்க கட்டி வாங்கி  மோசடி செய்த சுனில் மீது போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

விஜயா பதிப்பகத்தின் கி.ரா.விருது அறிவிப்பு

கோவை, ஜூலை 29- கோவை விஜயா பதிப்பகத்தின் 2023 ஆம்  ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர்  எஸ்.வி.ராஜதுரை தேர்வு செய்யப்பட் டுள்ளார். இது குறித்து கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சாகித்ய விருதுக்குப் பெருமை சேர்த்த கரிசல் இலக்கியத்தின் நாயகன் கி.ராஜ நாராயணனின் நினைவைப் போற்றும் வகை யில், கோவை விஜயா பதிப்பகத்தின் ‘’விஜயா வாசகர் வட்டம்’’ சார்பில், ஆண்டு தோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு    ‘’கி.ரா.” விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம்  ரொக்கம், கேடயம் ஆகியவை இந்த விருது டன் வழங்கப்படுகிறது.  2023 ஆம் ஆண்டுக் கான ‘’கி.ரா.’’ விருதுக்கு, பிரபல மார்க்சிய,  பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவையில் வரும் செப்டம் பர் 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில், ஓய்வு  பெற்ற தலைமைச் செயலர் வெ.இறையன்பு கலந்து கொண்டு விருது வழங்குகிறார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் பெயரை சொல்லி வேலை வாங்கித்தருவதாக ரூ 80 லட்சம் மோசடி

நாமக்கல், ஜூலை 29. கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக  ரூ80 லட்சம் வரை மோசடி செய்த நபர் வீட்டின் முன்பு பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை  ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அடுத்த வெண்ணந் தூர் ஒன்றியம் வெள்ளைபிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த ஈசாக் இந்திர குமார்(48). ரியல் எஸ்ட் அதிபராக உள்ளார். இவருடன் இணைந்து இவருடைய மனைவி தேவி  மற்றும் அவருடைய சித்தப்பா காசி மூவரும் கடந்த ஆட்சியில்  அமைச்சர்களாக இருந்த சிலரிடம் நெருக்கமாக இருப்ப தாக போட்டோக்கள் காட்டி  அவர்களுடன் பேசுவதாக பல ஏமாற்று வேலைகளை  செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல், ஆத்தூர்  போன்ற பகுதிகளில் உள்ள  இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்து பணம் பெற்றுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி, நாமக்கல்,சேலம் போன்ற பகுதிகளில் உள்ள ஆட்சியர் அலுவ லகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், மின்சாரத்துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களுக்கு அழைத்துச்  சென்று பணி நியமன ஆணையை வாங்கி கொடுத்து கையெழுத்துப் பெற்றுள்ளனர்.  இந்நிலையில், பணி நியமன ஆணை வழங்கி இரண்டு  வருடங்கள் ஆன நிலையில் அந்த பணி நியமன ஆணை  போலியானது என தெரிய வந்த நிலையில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட நபரை அணுகி பல முறை பணத்தை திருப்பி கேட்டு தராததால் பாதிக்கப் பட்டவர்கள் இவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை  நிலவியது. இதனையடுத்து, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்கிறோம் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும்  கலைந்து சென்றனர்.  நான்கு வருடத்திற்கு முன் கடந்த அதிமுக ஆட்சியில்  பதவி யில் இருந்த அமைச்சர் தங்கமணி,வேலுமணி, சரோஜா ஆகி யோரை தனக்கு தெரியும் என கூறி அவர்களுடன் நெருக்க மாக இருக்கும் போட்டோ காட்டி 18 - பேரிடம் சுமார் ரூ80 லட்சம்  வரை  மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.