நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கூடலூர் அருகே வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், கார் ஒன்று சேதமானது. இதில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.