அன்னூர், ஏப். 4- அன்னூர் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் 10க் கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட் டதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அன்னூர் சுற்றுவட் டாரத்தில் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப் பட்ட நிலையில், செவ்வாயன்று மதிய வேளையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக்காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தெலுங்கு பாளையம், பிள்ளையப்பம் பாளையம் உள்ளிட்ட கிராமங் களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. குடியிருப்புகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். வீடுகள் மற்றும் சாலையோரம் மின்கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்விநியோகம் தடை பட்டது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் தற்போது வரை பாதிப்புகளை பார்வை யிட சம்பந்தபட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டும் பகுதி வாசிகள், தேர்வு காலம் என்பதால் உடனடியாக மின் இணைப்பை சீரமைக்க வேண்டும் எனவும், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளனர். இதேபோன்று கோவை மாநகர பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், நகரத்தின் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில், முழ்கியது.