கோவை, ஏப்.16– கொரோனா தொற்று முழுமை யாக முடிவுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. முக கவசம், தனிமனித இடைவெளி ஆகியவைகளை பின்பற்றுவது மிக அவசியமானது என கோவை யில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியம் தெரிவித்தார். கோயம்புத்தூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபீலியா தின விழா சனி யன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாநகராட்சி மேயர் கல் பனா, ஆனையாளர் ராஜகோபல் சுன்காரா, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நிர்மலா ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணி யன் கலந்து கொண்டார்.
முன்னதாக, கோவை மாவட் டத்தில் உள்ள வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டி டத்திற்கு ரூ.9 கோடியும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூடு தல் கட்டிடத்திற்கு ரூ.9 கோடியும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்கு ரூ6.89 கோடி மதிப் பீட்டில் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத் தார். இதனையடுத்து விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஹீமோபிலீயாவை நோய் என கருத வேண்டாம். முன் னோர்களிடம் இருந்து வந்த அசவு கரியம் என நினைத்தால் போதுமா னது. மற்றவர்களைக் காட்டிலும் ஹீமோலீயா பாதித்தவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந் தால் போதுமானது. அதேநேரத் தில் ஒவ்வொரு உயிருக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகின் றது. ஒருவருக்கு பாதிப்பு என் றாலும் சிகிச்சை அளிக்க அரசு முழு முயற்சி எடுக்கும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் இதற்கான கட்ட மைப்பு ஏற்படுத்தப்படும். அடுத்த மாத துவக்கத்திலிருந்து தமிழகத் தில் 42 மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் ஹீமோபிலியா மருந் துகள் கிடைக்க நடவடிக்கை எடுக் கப்படும். 29ம் தேதி நடைபெறும் மானியக் கோரிக்கையின் போது ஹிமோபிலியாவிற்கான மருந்து கள் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும்.
இன்னுயிர் காப்போம் திட்டத் தால் இதுவரை 49 ஆயிரத்து 949 பேருக்கு உதவியாக 41 கோடி ரூபாயை இதுவரை அரசு வழங் கியுள்ளது. இதனால் 30 முதல் 40 சதவீதம் வரை விபத்துகளால் ஏற் படும் உயிரிழப்புகள் குறைந்துள் ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான திட்டம் - ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் 61 லட்சத்து18 ஆயிரத்து 911 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது. மேலும், இந்தியாவி லேயே அதிக மருத்துவ கட்ட மைப்பு கொண்ட மாநிலம் தமிழ் நாடு. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருந் தாலும், பல்வேறு நோய்களுக் கான சிறப்பு சிகிச்சைகள் கோவை யில் மட்டுமே கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார். மேலும், கொரோனா முழுமை யாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. 7 வகை வைரஸ்கள் நிலுவையில் உள் ளது. அரசு எடுத்த நடவடிக்கை யால் கடந்த 21 நாட்களாக உயிரி ழப்பு இல்லை. தமிழகத்தில் 92.38 சதவீதம் பேர் முதல் தவணையும், 77.28 பேருக்கு சதவீதம் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது. 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள் ளது. தமிழ்நாட்டை பொருத்த வரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது. கொரோனா கட் டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என் றார்.