கோவை, ஜூலை 7– தமிழகத்தில் இனி கட்டுப்பாடு கள் வராது. அதேநேரத்தில் கொரோ னாவால் ஒரே இடத்தில் 40 பேர் பாதித்தால் அந்த பகுதியை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவோம் என தமிழக சுகாதாரத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கோவை மதுக்கரை வட்டார பகு தியில் வருமுன் காப்போம் திட்டம் காசநோய் கண்காணிப்பு மற்றும் நட மாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம், ஆர்டி,பிசிஆர் புதிய எந்திரம் உள்ளிட்டவற்றை சுகா தாரத்துறை மா.சுப்ரமணியன் வியாழ னன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், மாவட்ட சுகாதார துறை இயக்குனர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் ரூ.10 கோடி மதிப்பில் காசநோய் வாகன திட்டங்களை துவக்கி வைத்துள் ளார். அதன் தொடர்ச்சியாக கோவை யில் இந்த திட்டம் துவங்கப்பட் டது. இத்திட்டம் மூலம் இதுவரை 1.15 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 136 நிதிநிலை அறிவிப்பு கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 18 அறிவிப்புகள் கோவை மாவட்டத்தை சார்ந்தது. மருத்துவ மனைகளில் மருத்துவ சிகிச்சையில் 22 லட்சம் வரை காப்பீட்டு திட்டத்தில் மக்கள் பயன்பெறலாம். கோவை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் குறித்து ஆய்வு செய்யப்ப டும். தேவைப்பட்டால் மற்றொரு இயந்திரம் வைக்கும் பணிகள் மேற் கொள்ளப்படும். கொரொனா தொற்று 15க்கும் மேற்பட்ட மாநிலங்க ளில் அதிகரித்து வருகிறது. தமிழகத் தில் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீ தம் பேர் வீட்டிலயே தனிமைப்படுத் தப்பட்டு கண்காணிகணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இனி கட்டுப்பாடுகள் வராது. ஒரு பகுதி யில் 40க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்றுகள் இருந்தால் கட்டுப்பாடு கள் விதிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 6 மாதங் களில் பணிகள் துவங்கும். கோவைக் கும் எய்ம்ஸ் மருத்துவமனை வேண் டும் என ஒன்றிய அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளோம் என்றார்.