கோவை, ஏப்.26- கோவை சூலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கட்டாபுரம் மற்றும் சுல்தான்பேட்டை யில் நடைபெற்ற சுகாதார திருவிழாவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கலை ஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சூலூர் தாலுகாவிட்குட்பட்ட வெங் கட்டாபுரம், சுல்தான்பேட்டை பகுதியில் நடைபெற்றது. கோவை சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெற்ற இந்நிகழ்வை, கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.வி.மகாலிங் கம் மற்றும் முத்துமாணிக்கம், தர்மராஜ் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, இந்நிகழ்வில் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கப் பட்டது. இதேபோன்று முதல்வர் காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும், முகாமில் கண், காது, பொது மருத் துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோ சனைகள் மற்றும் சிகிச்சைகள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்க ணக்கான மக்கள் பங்கேற்று பயன டைந்தனர். இதேபோன்று வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., பங்கேற்று துவக்கி வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற சுகாதராத் திருவிழாவில், ஏரா ளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.