அவிநாசி, மே 1- அவிநாசி - திருப்பூர் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற உறுப் பினர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சி பாளையம் திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலை களும் அமைந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் செல்லும் சாலை அருகேயுள்ள புதுப் பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சாலை யில் பல கழிவுகள் கொண்ட குப்பையை கொட்டி செல்கிறார்கள். மேலும், கழிவு குப் பைகளை தீ வைத்து விடுகின்றனர். இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் உள் ளிட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை உடன டியாக தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊராட்சிமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஊராட்சி நிர்வாகத்தி டம் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் எந்த வித மான நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. ஆகவே, உடனடியாக மாவட்ட நிர் வாகம் தலையிட்டு குப்பைகளை அப்புறப் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார்.