பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது
உதகை, மார்ச் 21- மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த 30க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் தேயிலை விவசாயத்துடன், பட் டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் ஆகிய மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலை யில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் 100க்கும் மேற் பட்ட குரங்குகள் முகாமிட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், வீடுகளில் புகுந்து திண்பண்டங்களை தூக்கி செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குரங்குகளை பிடித்து, தொலைதூர முள்ள வனப்பகுதியில் கொண்டு விட அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க ஓணிகண்டி பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்க ளால் கவரப்பட்ட குரங்குகள் ஒவ்வொன்றாக கூண்டுக்குள் சிக்கின. சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிபட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் தொலைதூரமுள்ள அப்பர் பவானி வனப்பகுதிக்கு கொண்டு சென்று அவற்றை விடு வித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்த னர்.
ஏற்காடு: முழுவீச்சில் கோடை விழா ஏற்பாடு பணிகள்
சேலம், மார்ச் 21- ஏற்காட்டில் நடைபெற உள்ள கோடை விழா மற்றும் மலர் கண் காட்சி பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருவதாக தோட்டக்க லைத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஏழைகளின் உதகை என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுக ளாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப் படவில்லை. இதனிடையே, கொரோனா நோய்த்தொற்று கட் டுக்குள் வந்ததைத் தொடர்ந்து நடப்பாண்டு ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு அண்ணா பூங் காவில் சுமார் 15 ஆயிரம் பூந்தொட் டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைத்து பராமரிக்கப் பட்டு வருகிறது. ஆனால், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இதனால் பொதுத்தேர்வு முடி வடைந்தவுடன் கோடை விழாவை நடத்தலாமா? என்பது குறித்து அதி காரிகள் ஆலோசனையில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்து வதற்கான முன்னேற்பாடு பணி கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பான முறையில் நடத்துவது என்றும், அனைத்து அமைச்சர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்ப டுகிறது. ஆனால், எந்த தேதியில் மலர் கண்காட்சி நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. மலர் கண்காட்சிக்கு வழக்கமாக சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வகை யான மலர்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஆனால், நடப் பாண்டு 15 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான பூ விதைகள் வைத்து அதை தோட்டக்கலைத் துறை அலுவலர்களால் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. டபுள் லைட், மார்கோ போலோ, மேஜிக் லேன்டர், பேமிலி மூன், சம்மர் ஸ்நோ, ரெட் டிரான், சம் மர் டைம், பர்புல்மூன், மிலகி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண் டைன், புளோரிமண்டா உள்பட 15 வகையான ரோஜாக்களும், லில்லியம், ஜினியா, மேரி கோல்டு, சால்வியா, ஆஸ்டர் உள் ளிட்ட பலவகையான மலர்க ளும் கண்காட்சிக்கு வைக்கப் பட உள்ளது. மேலும், புதிய வர வாக உதகை, கொடைக்கானலில் இருந்து லில்லியம் என்ற வகை பூக்களும் பார்வைக்கு வைக்கப் பட உள்ளது, என்றனர்.
பெண் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர் கைது
ஈரோடு, மார்ச் 21- சென்னை வேளச்சேரியை சேர்ந்த 43 வயது மதிக்கத் தக்க பெண் மருத்துவர் ஒருவர், அவரது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்திற்கு சென்னை - மங்களூர் விரைவு ரயி லில் சென்று கொண்டிருந்தார். அந்த ரயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பெண் மருத்துவர் மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்த அதே முன்பதிவு பெட்டி யில் ஒரு நபரும் இருந்துள்ளார். அந்த நபர் பெண் மருத்துவ ரிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் மருத்துவர் ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பெண் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கேரள மாநிலம் கோழிக் கோடு மாவட்டம், காலதிங்கள் பகுதியைச் சேர்ந்த கொய மான் என்பவரின் மகன் ரபீக் (39) என்பதும், அவர் கோழிக் கோட்டில் விளக்கு கடை வைத்து நடத்தி வருவதும் தெரி யவந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்த னர்.
மேட்டூர் அணை நிலவரம்
சேலம், மார்ச் 21- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 3 ஆவது நாளாக விநாடிக்கு 1,900 கனஅடியாக நீடிக்கி றது. இதனால், மேட்டூர் அணைக்கு திங்களன்று நீர் வரத்து 786 கனஅடியாக அதி கரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக் காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் படுகிறது. வரத்தை காட்டி லும், திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகி றது.திங்களன்று காலை 104.88 அடியாக இருந்தது. நீர் இருப்பு 71.31 டிஎம்சியாக உள்ளது.
நெகிழி மறு சுழற்சி விழிப்புணர்வுக்காக வெள்ளகோவிலில் மாரத்தான் போட்டி
திருப்பூர், மார்ச் 21- திருப்பூர் வெள்ளகோவிலில் நெகிழி மறு சுழற்சி விழிப் புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா வெள்ளகோவில் பகுதியில் பிரமாண்டமான மாரத்தான் போட்டி நடை பெற்றது. 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக மகாத்மா காந்தி நற்பணி மன்ற இயக்கத்தினர் சார்பில் இந்த மாரத்தான் போட்டி மூன்றாவது ஆண்டாக தற்போது நடத்தப்பட்டது. 4 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவின் கீழும் வெற்றி பெறும் முதல் 5 நபர்களுக்கு ஊக்கத் தொகை யும் வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் 2 பேர் பலி
அவிநாசி, மார்ச் 21- அவிநாசி அருகே சாலை விபத்தில் பனியன் தொழிலாளி கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பிரகாஷ் (29). இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறு வனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடன் பணியாற்றி வந்த பனியன் தொழிலாளியான திருநெல்வேலி நாங்குநெறி பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் விஸ்வா (30), என்ப வருடன் சனியன்று இருசக்கர வாகனத்தில் கோவைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவிநாசி பெரி யாயிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற டயர் வெடித்த தில், எவ்வித சைகையும் காட்டாமல் லாரியை ஓட்டுநர் நிறுத் தியதாக கூறப்படுகிறது. இதில், தடுமாறிய பிரகாஷின் இருசக்கர வாகனம் லாரி யின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். மேலும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வா சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயிரிழந்தார்.
குடிநீர் கட்டணத்தை குறைத்திடுக
சிபிஎம் நகரமன்ற உறுப்பினர் கோரிக்கை
அவிநாசி, மார்ச் 21- திருமுருகன்பூண்டி நகரமன்ற 14 ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி திங்களன்று நகர மன்ற ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். திருமுருகன்பூண்டி நகராட்சி குடிநீர் கட்டணம் 150 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 70 ரூபாயாக குறைக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை பள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். நகரில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். முறைகேடாக வார்டு வகை மாற்றம் செய்யப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி, அம்மாபாளையம், ராக்கியாபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகராட்சி 14 ஆவது வார்டு உறுப்பினர் பி.தேவராஜன் தலைமையில் நகர் மன்ற ஆணையரி டம் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை பெற்றுக்கொண்ட நகர மன்ற ஆணையர் கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி 10 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உதகையில் கோடை மழை: படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
உதகை, மார்ச் 21- உதகையில் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், வெப்பம் தணிந்து, ரம்மியமான காலநிலை நிலவு வதால், சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. தொடர் உறை பனியால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந் தது. மேலும், மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டன. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த செடிகள் கருகின. இந்நிலையில், உதகையில் கடந்த இரு தினங்களாக காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியம் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை யால், உதகையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உதகையில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து, ரம்மியமான காலநிலை நிலவுகிறது. இதனை அனு பவிக்க கூற்றுலா பயணிகள் மலை மாவட்டத்திற்கு வர துவங்கியுள்ளனர். மேலும், மழை பெய்து வருவதால் காட் டுத்தீ அபாயம் நீங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி டைந்துள்ளனர்.
தனியார் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு
தருமபுரி, மார்ச் 21- தருமபுரி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல் லம் மற்றும் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் இல்லம் அருகே உள்ளது செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி (17) என்ற மாணவி அப்பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந் தார். இந்நிலையில் திங்களன்று காலை அவர் தங்கியுள்ள விடுதியின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொ லைக்கு முயன்ற போது கால்முறிவு உட்பட உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதில், தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சம்மந்தப்பட்ட பள்ளி யில் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து, தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம், தருமபுரி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதி பதி வனிதா நேரில் விசாரணை நடத் தினார். இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு முயற்சித்தாரா அல்லது வேறு யாராவது மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட் டார்களா என்பது குறித்த பல்வேறு கோணங்களிலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண் டும் அதியமான்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தருமபுரி மாவட்டத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தருமபுரி: பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கிடுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தருமபுரி, மார்ச் 21- தருமபுரியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ. குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, தமிழ்நாடு அரசு சமீ பத்தில் நிறைவேற்றியுள்ள நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற் றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது, பெரும்பாலையில் அகழாய்வு, தரும புரி அகழ்வைப்பகத்தை மேம்படுத்து வது போன்ற திட்டங்கள் வரவேற்கத் தக்கது. அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி செய்யும் திட்டத்தை வரவேற்கும் அதே சமயம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஏற்கனவே நடைமுறையிலுள்ள மூவ லூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தையும் தொடர வேண் டும். மேலும், கடந்த ஜனவரி 20 ஆம் தேதியன்று காணொளிக் காட்சி மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய தமிழக முதல்வர் தருமபுரியில் சிப்காட், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாவது திட்டம், கோட்டையூர் பாலம், பால் குளிரூட்டும் நிலையம் ஆகிய திட்டங்களை அறி வித்தார். ஆனால் தமிழக நிதிநிலை அறிக்கையில் இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை. இத்திட்டங்களுக்கு உடனடி யாக நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்க வேண்டும். வேளாண் நிதி நிலை அறிக்கையில் தருமபுரியில் துவரை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உற் பத்தியில் முன்னணியில் திகழும் இம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சாமை, வரகு, கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற சிறுதானியங் களை மதிப்புக் கூட்டும் தானியங் களாக மாற்றி, சந்தைப்படுத்திட வேளாண் சார்பு தொழிற்சாலைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட வேண்டும். பால் உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் தருமபுரியில் பால் உற்பத்தியை மேலும் ஊக்கு விக்கும் வகையில் சிறப்பு திட்டங் களை வகுத்துச் செயல்படுத்த வேண் டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு வலி யுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசிடம் ஒப்படைக்க முடிவு
தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சென்னை, மார்ச் 21- ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல் லூரி மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்களின் நலன் கருதியும், பொது நலன் கருதியும் அரசிடம் ஒப்ப டைக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழ் நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதா வது, நிலம் மற்றும் பணமாக பொது மக்கள் அரசிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் உதவியுடன் மகா ஜன பள்ளி குழுமத்தால், 1954 ஆம் ஆண்டி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நிறுவப்பட்டது. இந்த பள்ளி குழுமமானது, 12.7.1954 அன்று ஈரோட்டில் 52 ஏக்கர் நிலப் பரப்பில் “மகாஜன கல்லூரி” என்ற பெயரில் கல்லூரியை தொடங்கி யது. பின்னர், 1959 ஆம் ஆண்டில் இக்கல்லூரி “சிக்கய்ய நாயக்கர் மகாஜன கல்லூரி” என மறுபெயரிடப் பட்டது. பிறகு, 1970 ஆண்டில் சிக் கய்ய நாயக்கர் கல்லூரி என மீண் டும் மறுபெயரிப்பட்டது. மாகஜன பள்ளி குழும் “சிக்கய்ய நாயக்கர் மேலாண்மை குழும்” என்ற பெயரில் ஒரு குழுமத்தை உரு வாக்கியது. தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கமாக அதனை பதிவு செய்யது. ஆனால், இந்த சங்கம்செயல்படாமல் போன தால், ஈரோடு மாவட்டப் பதிவாளர், சங்கங்களின் பதிவாளரிடம் இருந்து அதன் பெயரை நீக்கம் செய்து, 1995 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி யிட்ட அரசிதழில் அதன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேதியிலி ருந்து சங்கம் கலைக்கப்பட்டதாக கூறப்டுகிறது. இதற்கிடையில், இந்த கல்லூரி யின் அப்போதையை மேலாண் மைக் குழுவுக்கு எதிரான நிதி முறை கேடுகள் மற்றும் ஒழுங்கற்ற நிர்வா கம் குறித்த புகார்களின் பெயரில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளர்களுக்கு நேரடியாக ஊதி யம் வழங்க கோவை மண்டல கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அதிகாரம் அளித் தார். இதன்பின்னர், இக்கல்லூரியின் மேலாண்மையை இடை நீக்கம் செய்து, கோவை மண்டல கல்லூ ரிக் கல்வி இயக்குநரை தனி அலுவ லராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு, இரண்டு ஆண்டு களுக்கு மாநில அரசின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மண்டல கல்லூரிக் கல்வி யின் மண்டல இணை இயக்குநர் இந்த கல்லூரியின் மேலாண் மையை நடத்த பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், இன்னமும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனவே, மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதியும், பொது நலன் கருதியும் இந்த கல்லூரியை தற்போது அர சுக்கு மாற்றப்படலாம் மற்றும் ஒப்ப டைக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அதன் நோக்கத்திற்காக சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக இந்த சட்டமுன்வடிவு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல், மார்ச் 21- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்துள்ளது நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. என்இ சிசி சேர்மன் செல்வராஜ், முட்டை விலையில் 10 காசு உயர்த்தி விலை நிர்ணயம் செய்தார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 385 காசில் இருந்து 395 காசாக உயர்ந்துள்ளது. மற்ற மண் டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவ தால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்தி லும் விலை உயர்த்தப்பட் டுள்ளதாக பண்ணையாளர் கள் தெரிவித்துள்ளனர்.