districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கைதிகளை நேரடியாக மத்திய சிறைகளில் அடைக்க அனுமதி

சேலம், மார்ச் 25- கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால், 2 ஆண்டு களுக்கு பிறகு கைதிகளை நேரடியாக மத்திய சிறைகளில் அடைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பரவி, லட்சக்கணக்கான உயிர் களை பறித்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோ னாவுக்கு தற்போது வரை 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்தில் மிகவேகமாக பரவிய இந்த வைரசால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இத னால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரண மாக சிறையில் உள்ள கைதிகளை, உறவினர்கள் நேரடியாக பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து செல்போன் வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்பட்டுத்தப்பட்டது. அதே நேரத்தில், புதிதாக கைது செய்யப்படும் கைதிகளை மத்திய சிறையில் நேரடியாக அடைப்பது நிறுத்தப்பட்டது. இதற்காக தனியாக கிளைச்சிறைகள் ஒதுக்கப்பட்டது.  சேலத்தில் கைது செய்யப்படும் கைதிகளை ஆத்தூர் மாவட்ட சிறை, ஓமலூர், சங்ககிரி கிளை சிறைக்கு மாற்றப் பட்டனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இதனால், காவல் துறையினர் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக் கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தந்த மத்திய சிறை களில் கைதிகளை அடைக்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறைக் குள் கொரோனா பரவினால் அனைத்து கைதிகளும் பாதிக் கப்படுவார்கள் என்பதால், அவர்களை பார்க்க உறவினர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையும் தாண்டி கொரோ னாவினால் கைதிகள் பாதிக்கப்பட்டனர். சில இடங்களில் சிறை வார்டன்களும் கொரோனாவுக்கு பலியாகினர். இதை யடுத்து கைதாகி சிறைக்கு வருவோரை தனிமைப்படுத்தி வைக்கும் வகையில் கிளைச்சிறைகள் ஒதுக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்த பிறகு, அவர்களை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கொரோனா இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், கைதிகளை கிளைச்சிறைகள் அல்லாமல் மத்திய சிறை யில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத் தில் வழக்கம்போல் கொரோனா பரிசோதனை செய்த பிறகே சிறைக்கு அழைத்து வர வேண்டும், என்றனர்.

திருப்பூரில் வாடகை பாக்கி செலுத்தாத ஏழு கடைகளுக்கு சீல்

திருப்பூர், மார்ச் 25 -  திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாந கராட்சி அதிகாரிகள் பூட்டி  சீல் வைத்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குமரன் வணிக வளாகம், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி வணிக வளாகங்கள் உள் ளன. இங்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைக ளுக்கு ஏற்கனவே வாடகைத் தொகை செலுத்த மாநக ராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. எனினும் இதுவரை நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள்  நேரில் சென்று சீல் வைத்தனர். தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 கடை களில்  வாடகை தொகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்  வைக்கப்பட்டது . ரூ.26 லட்சம் வாடகை நிலுவை இருப்ப தாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டுள்ளனர்.

ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், மார்ச் 25 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூல னூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 991 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல், பருத்தியை கொள் முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ.12 ஆயிரத்து 299 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 10ஆயிரத்து 620க்கும், சராசரி விலை யாக ரூ.11ஆயிரத்து 550க்கும் விலைபோனது. மொத்தம் 8835 மூட்டைகள் 2 ஆயிரத்து 835 குவிண்டால் பருத்தி  ரூ. 3 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 146க்கு விற்பனையா னது. இந்த ஏலத்தில் 24 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத் திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

பெருமாநல்லூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

அவிநாசி, மார்ச் 25- பெருமாநல்லூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவு பாதுகாப்புச் சட்டத் திற்கு புறம்பாக செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்த னர். அவிநாசியில், கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த்திருவிழா கடந்த வாரம் முதல் விமர்சை யாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதி யில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது உணவகங்களில், உரிய தயா ரிப்பு முகவரி, காலவதி தேதி இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 32 சிற்றுண்டி பொட்டலங்கள், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 5.5 கிலோ சிற்றுண்டி உணவு கள், உணவகங்களில் மூடி வைக்காமல் இருந்த 2 கிலோ  மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்து, 6 கடையின ருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.  இதேபோல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன் படுத்திய 2 கடையின் உரிமையாளர்கள் மற்றும் புகை யிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 8 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 மற்றும் ரூ.50 ஆயி ரம் அபராதம் விதித்தனர். மேலும், உணவு தரம் தொடர் பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தெரியப்ப டுத்தலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித் துள்ளனர்.

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி அனைவரும் பங்கேற்க அழைப்பு

திருப்பூர், மார்ச் 25- இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆன் லைன் மூலமாக நடத்தப்படும் தேசிய வாக் காளர் விழிப்புணர்வு போட்டிகளில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைவரும் பங்கேற்று ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றுகளை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் ‘எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை” என்ற  கருத்தினை மையமாக கொண்டு http://voterawareness contest.in என்ற இணையதளம்  வாயி லாக தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை ஐந்து பிரிவுகளில் கடந்த ஜனவரி 25 முதல் நடத்தி வருகிறது. இதில், மார்ச் 31 வரை அனைவரும் பங்கேற்கலாம். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிலும் மாணவ, மாணவியர் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வு தினத்தன்று இப்போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்கவும், தனியார் நிறுவ னங்கள், அரசு கழகங்கள், மத்திய, மாநில  அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர், பின்னலாடை இதர அனைத்து தொழிற் சாலைகளில் பணிபுரிவோர் உள்பட ஆர்வ முள்ள அனைத்து வயது பொது மக்களும் அதிகளவில் பங்கேற்குமாறு ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தேர் திருவிழாவில் இருவர் காயம்

அவிநாசி, மார்ச் 25- அவிநாசி அருகே கரு வலூரில் புதனன்று நடை பெற்ற தேர் திருவிழாவின் போது இருவர் காயமடைந் ததால் பரபரப்பு ஏற்பட்டது. கருவலூரில் நடை பெற்ற சிறிய தேரோட்டத் தில், தேர் சக்கரம் நகரும் போது அருகில் நின்று  கொண்டிருந்த துளசியம் மாள் (63), என்பவர் காலில் தேர் ஏறியதால் காயம டைந்தார். அதேபோல் ரோஜா (16), என்ற சிறுமி யும் லேசான காயமடைந் தார். இதையடுத்து இரு வரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

திருப்பூர், மார்ச் 25- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி னர்.  பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது  நண்பர் அசோக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூரில்  உள்ள உறவினர் வீட்டிற்கு புதனன்று இரவு சென்றுள்ளார். பின்னர் இரவு பொள்ளாச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது, பல்லடம்-பொள்ளாச்சி சாலை வடுகபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் என்ஜின்  பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதில், திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரில் இருந்த  மணிகண்டன், அசோக்குமார் நல்வாய்ப்பாக உயிர் தப்பி னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்ல டம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவ்விபத் துக்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்  குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 25- 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற  விவசாயி கள் கூறுகையில், தமிழக அரசு தள்ளு படி செய்துள்ள கடன்களில் ஏழை,  எளிய குடும்பங்களைக் சேர்ந்த பலர் விடுபட்டு உள்ளனர். ஆகவே, இது தொடர்பாக துறை அதிகாரிகள் மீண் டும் நேரடி விசாரணை நடத்தி விடு பட்டவர்களில் தகுதி உள்ளவர்க ளுக்கு கடன் தள்ளுபடி வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். தரும புரி மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதி கரித்துள்ளதால், ஒவ்வொரு கிராம ஊராட்சி பகுதியிலும் நெல் அடிக்கும்  களம் அமைத்து தர வேண்டும். 60  வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழி லாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சி யர் ச. திவ்யதர்சினி பேசுகையில், கூட்டு றவு சங்கங்களில் பொதுவாக பெறப் பட்ட நகைக்கடன்கள் 19 விதிமுறைக ளுக்கு உட்பட்டு உரிய ஆய்வின் அடிப் படையில், தகுதி உடையவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் தகுதியுடைய யாரேனும் விடுபட்டி ருந்தால்  விண்ணப்பிக்க அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதி துணைப்பதிவாளர்களிடம் மனுக்களை அளிக்கலாம். தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக் கையை ஏற்று  மாதத்தில் முதல் வெள் ளிக்கிழமைகளில் உதவி ஆட்சியர் அலுவலகங்களில் கோட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்த  கூட்டங்களில் கோட்ட அளவில் விவசா யிகளின் குறைகள் கோரிக்கைகள் கேட்டு அறியப்பட்டு தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் கைது 

தாராபுரம், மார்ச் 25- தாராபுரத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு செரங்காடு பகுதி யைச் சேர்ந்தவர் கருப்பணன் என்பவரது மகன் ராஜேந்திரன்  (50). இவரது குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தின் வகைப்பாட்டை மாற்றுவதற்காக தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித் திருந்தார். ஆனால், பட்டா மாறுதல் செய்யப்படவில்லை.  இதுகுறித்து ராஜேந்திரன் முதுநிலை வருவாய் ஆய்வா ளர் மகேந்திரன் வில்சனிடம் கேட்டபோது ரூ.25 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்தி ரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதை யடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய பணத்தை ராஜேந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் வில்சனிடம் கொடுத்தார். அப்போது அங்கு  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவரை  கையும், களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் தடை 

நாமக்கல், மார்ச் 25- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா மெட் டாலா துணை மின்நிலை யத்தில் வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி (செவ்வாயன்று) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெறுகிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெட்டாலா, பிலிப்பாகுட்டை, கணவாய் பட்டி, கப்பலூத்து, ராஜபா ளையம், உடையார் பாளை யம், கார் கூடல்பட்டி, உரம்பு,  ஆயில்பட்டி காட்டூர், காம ராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோ கம் இருக்காது என  செயற் பொறியாளர் செல்வம் தெரி வித்துள்ளார்.