districts

img

கோவையில் பிரதமரே போட்டியிட்டாலும் திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவுவார்

திருப்பூர், மார்ச் 22 - இந்திய ஒன்றிய அரசின் பிரதமரே வந்து கோவை தொகுதியில் போட்டி யிட்டாலும் திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவுவார் என மாநிலத்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறி னார். திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறி முக கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர்  கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது பற்றியும், தமிழக முதல்வ ரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: பொள்ளாச்சி, ஈரோடு மட்டுமல்லாது தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று  நாடாளுமன்றத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தியாக திகழ்வார்கள். மக்கள் விரும் பக்கூடிய, மக்களை மதிக்கக்கூடிய, ஒன்றிய அரசு  மத்தியில் அமைய இருக்கிறது என்று  தெரிவித்தார்.  மேலும் கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த  கேள்விக்கு, கோவை தொகுதியில் ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி வந்து போட்டி யிட்டாலும்கூட, அங்கும் திமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  என்று கூறினார்.