இளம்பிள்ளை, ஜுன் 24- லாரியை பறிமுதல் செய்த எச்டிபி தனி யார் நிதி நிறுவனத்தை கண்டித்து லாரி உரி மையாளர்கள் பாடைகட்டி, பறையடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி - திருச்செங் கோடு சாலையில் எச்டிபி தனியார் நிதி நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறு வனத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சங்ககிரி பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் லாரி வாங்க கடன் பெற்று உள்ளார். தொடர்ந்து கடன் தவனை தொகையை செலுத்தி வந்துள் ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங் கள் நிதி நிறுவனத்திற்கு தவணைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இந்நிலையில் வட மாநிலத் திற்கு சென்று கோழித்தீவனம் ஏற்றிக் கொண்டு கடந்த 14ஆம் தேதி சேலம் வந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் லாரியை வழிமறித்து லாரியின் உரிமையாளர் பிரபுவை அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். இரண்டு மாத தவணைத் தொகை செலுத்தாதற்காக லாரியை பறி முதல் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள னர். இரண்டு நாட்களில் தவணை தொகை செலுத்துவதாக கேட்டும் ஏற்கவில்லை. இத னையடுத்து அடுத்த நாள் நிலுவைத் தொகையை மறுநாள் செலுத்தி தனது வாகனத்தை மீட்கச் சென்ற பொழுது பணத்தை பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரி கள் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அது இனி விற்பனைக்கு தான் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது என மிரட்டி அனுப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு லாரி உரிமையாளர் சங்கத்தினரிடம் முறை யிட்டுள்ளார். லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எச்டிபி நிதிநிறுவனம் ஏற்க வில்லை. அடியாட்களை வைத்து மிரட்டி லாரியை பறிமுதல் செய்யும் எச்டிபி நிறு வனத்தின் அரஜாக நடவடிக்கையை கண் டித்து லாரி உரிமையாளர்கள் எச்டிபி நிறு வனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. முன்ன தாக லாரி உரிமையாளர் ஒருவரை சடலம் போல் படுக்கவைத்து பறையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.