districts

img

கந்துவட்டி கும்பலின் துன்புறுத்தல் விசைத்தறி பெண் தொழிலாளி தற்கொலை முயற்சி

நாமக்கல், செப். 6- கந்து வட்டி கும்பலின் தொடர் துன்பு றுத்தல் நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து தற் கொலைகள் நடைபெறும் நிலையில், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு, கந்து வட்டி கும்பல் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட்  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தை அடுத்துள்ள வெடியரசம்பாளை யம் பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கந்து வட்டி கும்பலின் அடாவடி போக்கு அதிகரித்து வருகிறது. இதன்  காரணமாக இப்பகுதியை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி சம்பூர் ணம் என்பவர் விஷம் அருந்தி தற் கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே, கந்து  வட்டி கும்பலின் துன்புறுத்தல் நடவ டிக்கையால் சுஜாதா என்ற பெண்மணி  அண்மையில் தற்கொலை செய்து  கொண்டார். அடுத்தடுத்து நடைபெ றும் இச்சம்பவங்கள் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், வெடியரசம்பாளை யத்தில் விசைத்தறி பெண் தொழிலா ளியை தற்கொலைக்கு தூண்டிய, குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும்.  பள்ளி பாளையத்தில் தொடர்ந்து அதிக ரித்து வரும் கந்துவட்டி கொடுமைகளை  கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பள்ளி பாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை களை வலியுறுத்தி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோ கன், படைவீடு  பி.பெருமாள் உள்ளிட் டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இ.கோவிந்தராஜ் மற் றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வர்க்க, வெகுஜன அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.