districts

img

ஏற்றுக் கொண்ட கூலி உயர்வு வழங்குக விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 29- விசைத்தறி நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்ட கூலி உயர்வை வழங்கக் கோரி தொழிலாளர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் ஏராளமான விசைத் தறிகள் இயங்கி வருகிறது. இந் நிலையில், கடந்த மாதத்தில்  விசைத்தறியில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர் களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளிபாளை யம் - ஆவரங்காடு பகுதியில் உள்ள   தனியார் விசைத்தறி நிர்வாகம் மற்றும்  காவல் நிலையம் பின்புறம்  உள்ள மற்றொரு விசைத்தறி  நிர்வாகங்கள் தொழிலாளர் களுக்கு ஏற்றுக் கொண்ட கூலி  உயர்வை வழங்காததால், பத்துக் கும் மேற்பட்ட விசைத்தறி தொழி லாளர்கள் கடந்த நான்கு நாட்களாக  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் கூலி உயர்வை வழங்கக் கோரி வியானன்று பள்ளி பாளையம் காவல் நிலையம் அருகில் நாமக்கல் மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி அங்கமுத்து தலைமை ஏற்றார். சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார், ஒன்றியத் தலைவர் ஏ.அசன், மாவட்ட தலைவர் கே.மோகன், பொருளாளர் முருகேசன், சங்கத் துணை நிர்வாகி கே.குமார் ஆகி யோர் கோரிக்கைகளை வலியு றுத்தி சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், விசைத்தறி நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்ட கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு கூலி உயர்வு பெற்று தர வேண்டும் என முழக்கங்கள்  எழுப்பினர்.  இதில் திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.