நாமக்கல், ஜன.11- குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் விசைத்தறி தொழிலாளர்களுக்கும், 20% பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசைத்தறி தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நகரச் செயலாளர் பாலுசாமி தலைமை ஏற்றார். சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். நகரத் தலை வர் சரவணன், நகரப் பொருளாளர் வெங்கடேசன், துணைத்த லைவர் சக்திவேல், துணைச் செயலாளர் மோகன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.