திருப்பூர், ஜூலை 21 - கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டத்தை மீறும் விசைத்தறியாளர்கள் மீது பறக் கும் படை திடீர் ஆய்வு மேற்கொள்ளும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார். முன்கூட்டியே பத்திரிகைகள் வாயி லாக வெளிப்படையாக அறிவித்து விட்டு செல்வதுதான் திடீர் ஆய்வா? இது தவறு செய்யும் விசைத்தறியாளர்கள் உஷாராக இருப்பதற்கான நடவடிக்கை யாக உள்ளது என்று கைத்தறி நெசவா ளர்கள் தெரிவித்தனர். பல்வேறு பகுதிகளிலும் கைத்தறி நெசவாளர்கள் வரலாறு காணாத வாழ்க்கை நெருக்கடியை சந்தித்து வரு கின்றனர். திருப்பூர் மாவட்டத்திலும் கைத்தறி நெசவு மையங்களில் நெச வாளர்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் காங்கேயத்தில் கைத்தறி நெசவா ளர்கள் மாபெரும் பேரணியை நடத் தினர். இதில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டத்தை உறு தியாக அமல்படுத்த வேண்டும், தவறு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் உற்பத்தியாளர்கள் நெசவா ளர்களுக்கு கூலி குறைப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின் பின்னணி யில் கடந்த திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். இதில் கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட் டத்தை மீறி கைத்தறி ரகங்களை விசைத் தறிகளில் உற்பத்தி செய்வோர் மீது நடவ டிக்கை எடுக்கப்படும். பறக்கும் படை கள் அமைக்கப்பட்டுள்ளன, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பேட்டு பார் டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டரு டன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங் கவஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல் லன் ட்வீட் மற்றும் சத்தார்க் ஆகிய இர கங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய கூடாது என்று சட்டம் வரையறுக் கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறிக்கென ஒதுக்கப் பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், ஆறாவது தளம் அறை எண். 601 முதல் 603 வரை இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ (0421-2971195) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை, கைத் தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டத்தை மீறி தவறு செய்யும் விசைத்தறியாளர்களை தடுத்து நிறுத்த உதவாது. மாறாக அவர்கள் முன் னெச்சரிக்கையுடன், பறக்கும் படை ஆய்வு வந்தால் தப்பித்துக் கொள்வ தற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்கே வழிவகுக்கும். எனவே இது போன்ற அறிவிப்பு செய்யாமல் திடீர் ஆய்வு மேற்கொள்வ தன் மூலம் தான் விசைத்தறியில் கைத் தறி துணி உற்பத்தியை உண்மையி லேயே கட்டுப்படுத்த முடியும் என்று கூறி னர். அத்துடன் தமிழக அரசு இலவச வேட்டி, சேலைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுப்பதை மாற்றிக் கொண்டு கைத்தறியாளர்கள் உற்பத்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இலவச வேட்டி சேலை உற்பத்தி கைத்தறியாளர்களுக்கு கிடைத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும், வறுமை நெருக்கடி யில் இருந்து ஓரளவு மீள முடியும் என் றும் கைத்தறி நெசவாளர்கள் கூறினர். இந்த அடிப்படை விஷயத்தைச் செய்யாமல் செய்தியறிக்கை வெளியி டுவது வெறும் கண்துடைப்பு நடவடிக் கையாகவே இருக்கும் என்றும் அவர் கள் வேதனையை வெளிப்படுத்தினர்.