திருப்பூர், நவ. 10 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் இயக்கத்தின் முன்னோடித் தலை வர்களில் ஒருவரும், மார்க்சியத்தின் மீது உறுதியான பற்றுக் கொண்ட கம்யூ னிஸ்ட் ஊழியருமான மறைந்த ஆசிரி யர், தோழர் செ.நடேசன் படத்திறப்பு மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங் கும் நிகழ்ச்சி ஊத்துக்குளியில் புதன்கி ழமை நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் நலனுக்காகவும், பணி ஓய்வுக்குப் பின் மார்க்சிஸ்ட் கட்சியில் முழு ஈடு பாட்டுடன் செயலாற்றியவர்.சிறந்த மொழி பெயர்ப்பாளராக, எழுத்தாளராக, பேச் சாளராக விளங்கியவர் மறைந்த தோழர் ஆசிரியர் செ.நடேசன். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி வட்டக்குழு சார்பில் புதனன்று ஆர்.எஸ். திருமுருகன் ஹோட்டல் கூட்ட ரங்கில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார் தலைமை வகித்தார். வட்டக் குழு செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி வரவேற்றார். தோழர் செ.நடேசன் உருவப் படத்தை திறந்து வைத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் கு.சரஸ்வதி ஆகியோர் செ. நடேசனின் பல்வேறு பணிகளையும், அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை யும், பண்புகளையும் நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
இந்நிகழ்வில் ஊத்துக்குளி வட்டக் குழு சார்பில் தீக்கதிர் நாளிதழ் 97 ஆண்டு சந்தா, 6 அரையாண்டு சந்தா என 103 சந்தாவுக்கு, இரண்டு லட்சத்து முந்நூறு ரூபாயை வட்டக்குழு செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி, அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண னிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன் டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் வி.ஏ.சரவ ணன், மதிமுக ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜ், காங்கிரஸ் எம்.சி.எஸ்.மனோஜ், சி.பி.எம். வட்டக்குழு உறுப் பினர்கள் கை.குழந்தைசாமி, ச.சசிகு மார், க.பிரகாஷ், செல்வி, க.லெனின் மற்றும் செ.நடேசன் அவர்களின் குடும் பத்தார், நண்பர்கள், உள்ளிட்டு ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர். கட்சி யின் ஊத்துக்குளி வட்டக் குழு உறுப்பி னர் வி.கே.பழனிச்சாமி நன்றி தெரி வித்தார். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் தோழர் செ.நடேசன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.ஊத்துக்குளி ஆர்.எஸ்.பேருந்து நிறுத் தத்தில் நவம்பர் புரட்சி தினத்தை யொட்டி கட்சி கொடியை ஏற்றி வைத்து அவர் சிறப்பித்தார்.
களப்போராட்டம், கருத்துப் போராட்டம்
முன்னதாக, செ.நடேசன் உருவப் படத்தை திறந்து வைத்து ஜி.ராமகிருஷ் ணன் பேசுகையில், ஆசிரியர் பணியிலி ருந்து ஓய்வு பெற்றாலும், சமூக சேவை என்ற தனது பணியில் அவர் கடைசி மூச்சுள்ள வரை ஓய்வு பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அவர் தொடர்ந்து செயல்பட்டார். எழுத் தாளராக, மொழி பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக, புத்தகங்களை வெளியிடுவது, வகுப்பு எடுப்பது, கூட் டங்கள் நடத்துவது என கட்சிப் பணி களை தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்து வந்தார். மார்க்சிய, லெனினியம் என்ற அந்த மகத்தான தத்துவம்தான் அவருக்குத் தூண்டுதலாக, தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருந்தது. எந்த பிரதிப லனும் எதிர்பார்க்காமல் நாடு முழு வதும் இயக்கப் பணியாற்றும் கட்சி உறுப்பினர்களை இயக்குவதும் மார்க் சிய தத்துவம்தான். நடேசன் களப்போராட்டம், கருத்தி யல் போராட்டம் என இரண்டிலும் அவர் முனைப்புடன் சிறப்பாகச் செயல்பட் டிருக்கிறார். இந்தியாவில் 10 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிக் கடனை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இந்த கருத்தை எப்படிச் சொல்வது, வறுமைக்கு, வேலை யில்லா திண்டாட்டத்திற்கு, 60 சதவிகி தம் பேர் வறுமையில் இருக்கும் நிலை யில் உலகின் மூன்றாவது பணக்காரராக அதானி வருவதற்கு என்ன காரணம் என்ற கருத்தியலையும் மக்களுக்கு விளக்கும் பணியில் நடேசன் ஈடுபட்டி ருக்கிறார். மகத்தான போராளியாக வாழ்ந்து மறைந்த நடேசன் எந்த லட்சி யத்துக்காகப் பாடுபட்டாரோ அந்த நோக்கத்திற்காக நாமும் பாடுபடுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் மகத் தான அஞ்சலியாக இருக்கும், என் றார்.