districts

img

கைவினைப் பொருட்கள் கண்காட்சி

ஈரோடு, டிச. 26- அந்தியூரில் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த கை வினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குட்பட்டது பர்கூர் ஊராட்சி. இங்குள்ள சோளகனையில் மலைவாழ் மக்கள் சுமார் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நபார்டு வங்கி உதவியுடன் கைவினைப் பொருட்கள் தயாரிப் பதற்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம்  மூங்கிலான கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டன. இதனை அந்தியூர் வாரச்சந்தையில் கண்காட்சி யாக வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி மற்றும் விற் பனை விழாவினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்க டாசலம் தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி தலை வர் எம்.பாண்டியம்மாள், ஒன்றிய அவைத்தலைவர் புட்டன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன், தாலுகாச் செய லாளர் ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.