districts

img

அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.31- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் அந்தியூ ரில் முன்பு செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவித்த படி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கா மல் சிலருக்கு ரூ.1000 மட்டும் வழங்குவ தைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட உதவித் தொகையை பாரபட்சமின்றி வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித்தார். மாவட்ட உதவி தலைவர் பி.மாரி முத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரி முத்து, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர்  வாழ்த்தி பேசினர். முடிவில், மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் முரு கன் நன்றி கூறினார்.

;